ஆப்நகரம்

வில்லி கேரக்டர் எனக்கு வித்தியாசமாக இருந்தது: சோனியா அகர்வால்!

முதல் தடவை வில்லியாக நடித்தது எனக்கு வித்தியாசமாக இருந்தது என்று நடிகை சோனியா அகர்வால் கூறியுள்ளார்.

Samayam Tamil 27 Aug 2018, 6:05 pm
முதல் தடவை வில்லியாக நடித்தது எனக்கு வித்தியாசமாக இருந்தது என்று நடிகை சோனியா அகர்வால் கூறியுள்ளார்.
Samayam Tamil Sonia-Agarwal


நடிகை சோனியா அகர்வால் தற்போது ‘உன்னால் என்னால்’ என்ற படத்தில் நடித்த வருகிறார். இந்தப் படத்தை ஸ்ரீ ஸ்ரீ கணேஷா கிரியேஷன் சார்பில் ராஜேந்திரன் சுப்பையா என்பவர் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தை ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா இயக்கி வருகிறார். இந்தப்படத்திற்கு முகமது ரிஸ்வான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் ஜெகா, உமேஷ் ஆகிய இருவரும் கதாநாயகன்களாக நடிக்கின்றனர். இவர்களுடன் இயக்குனர் ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் கதாநாயகிகளாக நடிகைகள் லுப்னா, நிகாரிகா, சஹானா ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும் ராஜேஷ், ரவிமரியா, டெல்லி கணேஷ், ஆர்.சுந்தர்ராஜன், நெல்லைசிவா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் நடிகை சோனியா அகர்வால், கொடூர வில்லி கேரக்டரில் நடிக்கிறார்.

‘காதல் கொண்டேன்’, ‘கோவில்’ உள்ளிட்ட பல படங்களில் வெகுளித்தனமான கதாநாயகியாக நடித்த சோனியா அகர்வால், தற்போது முதல் முறையாக ஒரு படத்தில் ஒரு படத்தில் கொலை செய்யும் அளவிற்கு கொடூர வில்லியாக நடித்துள்ளார். இந்தப் படம் அவருக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்ததாக கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்