ஆப்நகரம்

Soorarai Pottru: வெளியானது சூரரைப் போற்று படத்தின் இரண்டாவது பாடல்!

சூரரைப் போற்று படத்தின் இரண்டாவது சிங்கிள் வெய்யோன் சில்லி வெளியானது.

Samayam Tamil 13 Feb 2020, 5:10 pm
சுதா கொங்கரா, சூர்யா இணைந்திருக்கும் சூரரைப் போற்று படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலாக வெய்யோன் சில்லி பாடல் வெளியானது. முதல் முறையாக விமானத்தில் பயணிக்கும் 100 ஏழைக் குழந்தைகளோடு, நடிகர் சூர்யா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் உட்பட சூரரைப் போற்று படக்குழுவினரும் இந்த பாடல் வெளியீட்டின் போது உடன் இருந்தனர்.
Samayam Tamil soorarai potru


பாடல் வெளியீட்டு விழாவில், முதன் முறையாக விமானத்தில் பறந்த ஏழாம் வகுப்பு மாணவி ஒருவர் தன்னுடைய அனுபவத்தை மிகவும் மகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார்.


இந்த நிகழ்வின்போது விமானத்தில் மிகப் பிரம்மாண்டமாக வரையப்பட்டிருந்த சூரரைப் போற்று படத்தின் போஸ்டர் ஓவியம் திறந்து வைக்கப்பட்டது. ரஜினிக்கு பின், விமானத்தில் இவ்வளவு பிரம்மாண்டமாக விளம்பரம் செய்யப்பட்டது நடிகர் சூர்யாவுக்குதான். விமானத்தில், பருந்தாகுது ஊர்க்குருவி எனும் வரிகளுக்கு ஏற்ப சூர்யா கோபமான முகத்துடன் பின்புறத்தில், ஊர்க்குருவியின் புகைப்படமும் வரையப்பட்டுள்ளது.


"வெய்யோன் சில்லி இப்ப நெலத்தில் எறங்கி அனத்துறா " என்று தொடங்கும் இந்த பாடல், ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில் உருவாகியுள்ளது. பாடலை விவேக் எழுதியுள்ளார். ஹரிஸ் சிவராமகிருஷ்ணன் குரலில் பாடல் ரொமான்டிக்காக இருக்கிறது என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்