ஆப்நகரம்

தன் ஹோட்டல் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் லீவு கொடுத்த சூரி

காமெடியன் சூரி தான் நடத்திவரும் ஹோட்டல்களில் ஊழியர்களுக்கு முழு சம்பளத்துடன் லீவு கொடுத்துள்ளார்.

Samayam Tamil 6 Apr 2020, 2:32 pm
நடிகர் சூரி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். தற்போது கொரோனா வைரஸ் அதிகம் பரவி வருவதால் சினிமா படங்களின் ஷூட்டிங் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil Soori


அதனால் சூரி சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். தினமும் தனது குடும்பத்துடன் அடிக்கும் லூட்டியை விடியோவாக எடுத்து ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார். அவை இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் இந்த ஊரடங்கு பற்றி சூரி பேசும்போது, "குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் பேசவே நேரம் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது கட்டாய ஓய்வு கிடைத்திருக்கிறது. வீட்டில் மனைவிக்கு உதவுகிறேன். குழந்தைகளை குளிப்பாட்டுகிறேன், சமையலில் உதவுகிறேன்" என கூறியுள்ளார்.

மேலும் சூரி மதுரையில் அம்மன், அய்யன் என இரண்டு ஹோட்டல்களை நடத்திவருகிறார் . அதை சூரியின் சகோதரர்கள் பார்த்துக் கொள்கின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் ஹோட்டலை மூடிவிட்டனர்.

இந்த ஹோட்டல்களில் பணியாற்றி வந்த ஊழியர்கள் அனைவருக்கம் முழு சம்பளத்துடன் விடுப்பு அளித்துவிட்டேன் என சூரி கூறியுள்ளார். சூரியின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

2017ல் மதுரை காமராஜர் சாலையில் அம்மன் சைவ உணவகத்தை சூரி தொடங்கினார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு சில மாதங்கள் முன்பு தான் “அம்மன்” உயர்தர சைவ உணவகம் மற்றும் “அய்யன்” உயர்தர அசைவ உணவகம் என்று இரண்டு புதிய கிளைகளை மதுரை அவனியாபுரம் விமான நிலைய பைபாஸ் சாலையில் துவங்கினர்.

அதை நடிகர் சிவகார்த்திகேயன் தான் வந்து ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்