ஆப்நகரம்

பாட்டியின் ஆசிர்வாதத்தால் சந்தோஷத்தின் உச்சம் தொட்ட சவுந்தரராஜா!

பிகில் படத்தின் 25வது நாள் கொண்டாட்டத்தில் சவுந்தரராஜா கலந்து கொண்டார்.

Samayam Tamil 19 Nov 2019, 6:14 pm
பிகில் படத்தின் 25வது நாள் கொண்டாட்டத்தில் சவுந்தரராஜா கலந்து கொண்டார். தீபாவளி ட்ரீட்டாக விஜய் நடிப்பில் வெளியான படம் பிகில். என்ன தான் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் விஜய் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
Samayam Tamil பாட்டியின் ஆசிர்வாதத்தால் சந்தோஷத்தின் உச்சம் தொட்ட சவுந்தரராஜா!
பாட்டியின் ஆசிர்வாதத்தால் சந்தோஷத்தின் உச்சம் தொட்ட சவுந்தரராஜா!


இந்த நிலையில் பிகில் வெளியாகி 25ஆவது நாளைக் கடந்து வெற்றிகரமாகத் திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களிலும், பொது வெளியிலும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் 25வது நாள் வெற்றி விழா மற்றும் மக்கள் நலப்பணி கொண்டாட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சவுந்தரராஜா கலந்து கொண்டார்.

அருண் விஜய் பிறந்தநாளுக்கு லைகா கொடுத்த இன்ப அதிர்ச்சி

அதில் விஜய் ரசிகர்கள் சார்பில் சவுந்தரராஜா,பொது மக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் தலைக்கவசம் வழங்கியுள்ளார்.


இது தொடர்பாக சவுந்தரராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், 'நாலு பேருக்கு நல்லது செய்யணும்னு கூட நினைக்க வேண்டாம், கெட்டது செய்யாம இருந்தாலே போதும். நம்ம மனசும், உடலும் ஆரோக்கியமா இருக்கும். தளபதி விஜய் அண்ணாவின் பிகில் 25ஆவது நாள் வெற்றி விழா & மக்கள் நலப்பணி கொண்டாட்டம். ஒரு பாட்டியின் ஆசீர்வாதம் சந்தோசத்தின் உச்சம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆர்.ஜே. பாலாஜி படத்திற்காக 8 ஆண்டுகள் கழித்து விரதம் இருக்கும் நயன்தாரா

இதுவரை படம் 300 கோடி வசூல் செய்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் தயாரிப்பு தரப்பில் இருந்து இன்னும் இது உறுதி செய்யவில்லை. அதனால் இதை நம்ப முடியாது என்று ஒரு தரப்பினர் கூறினர். இதையொட்டி விஜய் ரசிகர்கள் வசூல் விவரத்தை அறிவிக்கும் படி கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்