ஆப்நகரம்

கணவருக்கு குட்பை: விவாகரத்து பெற்ற சவுந்தர்யா!

சவுந்தர்யா – அஸ்வினுக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNN 4 Jul 2017, 6:44 pm
சவுந்தர்யா – அஸ்வினுக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil soundarya ashwin get divorce from chennai family court
கணவருக்கு குட்பை: விவாகரத்து பெற்ற சவுந்தர்யா!


சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா தான் காதலித்த தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாரை கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு தன்னுடைய அப்பாவின் கோச்சடையான் படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இதற்கிடையில், சவுந்தர்யா-அஸ்வினின் திருமண வாழ்க்கையில் கசப்பு ஏற்பட்டது. இதன் விளைவாக இருவரும் ஒரேவீட்டில் பேசிக் கொள்ளாமல் வாழ்ந்து வந்தனர்.



இந்நிலையில், மகன் வேதை தூங்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். இதில், அஸ்வின் மீண்டும் சவுந்தர்யாவுடன் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்தார். ஆனால், சவுந்தர்யா விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் 25ம் தேதி நீதிபதி மரியா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சவுந்தர்யா, அஸ்வின் இருவரும் கோர்ட்டில் ஆஜராகி பரஸ்பரம் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக கூறினர். இருவரின் கருத்தை கேட்டபிறகு இந்த வழக்கை ஜூலை 4ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.



இந்நிலையில், இன்று சவுந்தர்யா மற்றும் அஸ்வின் இருவரும் மீண்டும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது, சவுந்தர்யா-அஸ்வினுக்கு விவாகரத்து வழங்கி குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்