ஆப்நகரம்

Soundarya Rajinikanth: அக்கா ஐஸ்வர்யா ரஜினிகாந்தை அடுத்து தங்கை சவுந்தர்யா போலீசில் புகார்

Soundarya Rajinikanth police complaint: அக்கா ஐஸ்வர்யா ரஜினிகாந்தை அடுத்து தங்கை சவுந்தர்யா விசாகன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

Authored byஷமீனா பர்வீன் | Samayam Tamil 10 May 2023, 10:26 am
Soundarya Rajinikanth car complaint: ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா விசாகன் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Samayam Tamil soundarya rajinikanth files a complaint in teynampet police station
Soundarya Rajinikanth: அக்கா ஐஸ்வர்யா ரஜினிகாந்தை அடுத்து தங்கை சவுந்தர்யா போலீசில் புகார்


​சவுந்தர்யா​

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா தன் கணவர் விசாகன், மகன்கள் வேத் கிருஷ்ணா, வீர் ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று இரவு புகார் அளித்துள்ளார். அவர் தன் புகார் மனுவில் கூறியிருப்பதாவது, ஏப்ரல் மாதம் 23ம் தேதி போயஸ் கார்டன் வீட்டில் இருந்து ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு அருகே ஒரு காரில் சென்றேன். அப்பொழுது என் ரேஞ்ச் ரோவர் கார் சாவியை என்னுடன் எடுத்துச் சென்றேன். என் ரேஞ்ச் ரோவர் கார் சாவி மாயமாகிவிட்டது. அதை கண்டுபிடித்துக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என அதில் தெரிவித்துள்ளார்.

நாக சைதன்யா

​ஐஸ்வர்யா​

சவுந்தர்யாவின் புகார் மனுவை பெற்றுக் கொண்ட போலீசார் அது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இருப்பினும் வழக்குப்பதிவு செய்யவில்லையாம். முன்னதாக ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தன் விலை உயர்ந்த நகைகள், வெள்ளிப் பொருட்கள் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 60 பவுன் நகைகள் மாயமானதாக தெரிவித்தார். இது தொடர்பாக தன் வீட்டில் வேலை செய்த பெண், கார் டிரைவர் உள்ளிட்ட மூன்று பேர் மீது சந்தேகமாக இருப்பதாகவும் கூறினார்.

​100 பவுன்​

ஐஸ்வர்யாவின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 100 பவுனுக்கும் மேற்பட்ட நகைகளை மீட்டார்கள். ஐஸ்வர்யா வீட்டில் திருடிய நகைகளில் சிலவற்றை விற்று பணிப்பெண் சொகுசு பங்களா வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. காதல் கணவரான தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா தன் மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் அப்பாவின் போயஸ் கார்டன் வீட்டில் வசித்து வருகிறார். மகன்கள் வளர்ந்துவிட்டால் மீண்டும் கெரியரில் கவனம் செலுத்தத் துவங்கிவிட்டார்.

​லால் சலாம்​

Rajinikanth: லால் சலாம் ஷூட்டிங்கிற்காக மும்பை பறந்த ரஜினி: அந்த நடை, அந்த ஸ்மைல், ப்ப்பா

விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோரை வைத்து லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார் ஐஸ்வர்யா. 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட காட்சிகளை படமாக்கி முடித்துவிட்டார். லைகா நிறுவனம் தயாரிக்கும் லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் கவுரவத் தோற்றத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. எளிமையான உடையில் அவர் மும்பை கிளம்பியதை பார்த்த ரசிகர்களோ, தலைவருக்கு ஈகோவும் இல்லை, அவரிடம் பந்தாவும் இல்லை. என்ன ஒரு எளிமை, இந்த வயதிலும் சுறுசுறுப்பாக வேலை செய்கிறார் என தெரிவித்தார்கள்.



​மொய்தீன் பாய்​

லால் சலாம் படத்தில் ரஜினி கதாபாத்திரத்தின் பெயர் மொய்தீன் பாய். அந்த கதாபாத்திரத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்கள். போஸ்டரை பார்த்த ரஜினி ரசிகர்கள் ஆஹா, ஓஹோ என்று தெரிவித்தார்கள். சிலருக்கு திருப்தி ஏற்படவில்லை. பாட்ஷா பாயாக மும்பையை கலக்கிய தலைவர் தற்போது மொய்தீன் பாயாக அதே நகருக்கு சென்றிருக்கிறார் என்றார்கள் ரசிகர்கள்.

Rajinikanth Lal Salaam Moideen Bhai: மொய்தீன் பாயாக மும்பை திரும்பிய பாட்ஷா பாய் ரஜினிகாந்த்!

​ரஜினி​

லால் சலாம் படத்தில் ரஜினிக்கு தங்கையாக ஜீவிதா ராஜசேகர் நடிக்கிறார். தன் தந்தையை இயக்கும் சந்தோஷத்தில் இருக்கிறார் ஐஸ்வர்யா. அப்பாவை வைத்து படம் இயக்குவதை பாக்கியமாக கருதுகிறார். ஐஸ்வர்யா இதுவரை எடுத்த காட்சிகளை பார்த்த ரஜினிகாந்த் சூப்பர்மா என்று மனதார பாராட்டியுள்ளார். தலைவர் பாராட்டியதால் புது தெம்புடன் வேலை செய்து வருகிறார்.

எழுத்தாளர் பற்றி
ஷமீனா பர்வீன்
டிஜிட்டல் ஊடகத்தில் தமிழ் சமயம் ஊடகத்தில் சினிமா செய்திகளை அளித்து வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். முன்னதாக நாட்டு நடப்பு, லைஃப்ஸ்டைல், ஸ்போர்ட்ஸ் செய்திகள் அளித்தவர்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்