நடிகர் மோகன்லால் மகன் பிரனவ் நடிக்க வேண்டிய படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார்.
‘கோச்சடையான்’ அனிமேஷன் கேப்ட்சர் முறையிலான படம் இயக்கியவர் சவுந்தர்யா. நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய படம் இயக்க முடிவு செய்துள்ளார் சவுந்தர்யா. படத்தில் நடிக்க மோகன்லால் மகன் பிரனவிடம் சம்மதம் கேட்டனர். அதற்கு பிரனவ் மறுத்து விட்டார்.
ஏற்கனவே மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடிக்க பிரனவ்வுக்கு வாய்ப்பு வந்ததது. இருப்பினும் அனைத்து பட வாய்ப்புகளையும் ஏற்க மறுத்துவிட்டார். இந்நிலையில் சவுந்தர்யா தனது படத்தில் நடிக்க வேண்டும் என அணுகிய போது, பிரனவோ, தற்போதுள்ள சூழலில் நடிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டார். ஏற்கனவே மலையாள படத்தில் நடிக்கவுள்ளார். அதுதான் அவரது முதல்படம். தனது முதல் படமாக இருப்பதால் முழுகவனமும் செலுத்த வேண்டி உள்ளது. நடிப்பைவிட இயக்குனர் ஆவதில்தான் என் விருப்பம் என்பதால் வரும் வாய்ப்புகளை மறுத்து வருவதாக தெரிவித்தார். இந்தப் படத்தின் கதை குறித்து சவுந்தர்யா தன் தந்தையிடம் ஆலோசனை கேட்டார். கதையை கேட்ட ரஜினி, இந்த கதை தனுஷுக்குப் பொருத்தமாக இருக்கும். அவரை ஹீரோவாக நடிக்க வை என்றாராம்.
‘கோச்சடையான்’ அனிமேஷன் கேப்ட்சர் முறையிலான படம் இயக்கியவர் சவுந்தர்யா. நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய படம் இயக்க முடிவு செய்துள்ளார் சவுந்தர்யா. படத்தில் நடிக்க மோகன்லால் மகன் பிரனவிடம் சம்மதம் கேட்டனர். அதற்கு பிரனவ் மறுத்து விட்டார்.
ஏற்கனவே மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடிக்க பிரனவ்வுக்கு வாய்ப்பு வந்ததது. இருப்பினும் அனைத்து பட வாய்ப்புகளையும் ஏற்க மறுத்துவிட்டார். இந்நிலையில் சவுந்தர்யா தனது படத்தில் நடிக்க வேண்டும் என அணுகிய போது, பிரனவோ, தற்போதுள்ள சூழலில் நடிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டார். ஏற்கனவே மலையாள படத்தில் நடிக்கவுள்ளார். அதுதான் அவரது முதல்படம். தனது முதல் படமாக இருப்பதால் முழுகவனமும் செலுத்த வேண்டி உள்ளது. நடிப்பைவிட இயக்குனர் ஆவதில்தான் என் விருப்பம் என்பதால் வரும் வாய்ப்புகளை மறுத்து வருவதாக தெரிவித்தார். இந்தப் படத்தின் கதை குறித்து சவுந்தர்யா தன் தந்தையிடம் ஆலோசனை கேட்டார். கதையை கேட்ட ரஜினி, இந்த கதை தனுஷுக்குப் பொருத்தமாக இருக்கும். அவரை ஹீரோவாக நடிக்க வை என்றாராம்.