ஆப்நகரம்

பானுப்பிரியாவால் கொடுமைப்படுத்தப்பட்ட சந்தியா மீட்பு!

பானுப்பிரியாவால் கொடுமைப்படுத்தப்பட்டதாக கூறப்படும் 14 வயது சிறுமி சந்தியாவை போலீசார் மீட்டு குழந்தைகள் காப்பத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Samayam Tamil 29 Jan 2019, 2:54 pm
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை பானுப்ரியா. சென்னையில் உள்ள இவரது வீட்டில் ஆந்திர மாநிலம் சாமர்லகோட்டையை சேர்ந்த பிரபாவதியின் 14 வயது மகள் சந்தியா வேலைக்கு சேர்ந்தார்.

இந்நிலையில் சந்தியாவின் அம்மா பிரபாவதி ஆந்திர மாநிலம், சாமர்லகோட்டை காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் “நடிகை பானுப்பிரியா தனது 14 வயது மகள் சந்தியாவை வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்றார். கடந்த 18 மாதமாக சம்ளமும் கொடுக்கவில்லை.

பானுப்ரியாவின் அண்ணன் கோபாலகிருஷ்ணன் என்பர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் என் மகள் சந்தியாவை துன்புறுத்தி வருகிறார்” என்று புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் சாமர்லகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நடிகை பானுப்பிரியா இதை மறுத்தார். தன் வீட்டில் இருந்த பொருட்களை சந்தியா திருடியதாகவும், அதை கண்டுபிடித்துவிட்டதால் தங்கள் மீது வீண் பழி போடுகிறார்கள் என்றார்.

இந்த நிலையில் சென்னையில் உள்ள பானுப்பிரியா வீட்டில் வேலை பார்த்த சிறுமி சந்தியாவை குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் மீட்டனர். பின்னர் அவரை குழந்தைகள் நலக்குழு முன்பு ஆஜர்படுத்தினர். அங்கு சிறுமியிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அந்த சிறுமி தேனாம்பேட்டையில் உள்ள குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிறுமியிடம் விசாரணை நடத்த சாமர்லகோட்டை போலீசார் வருகிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்