ஆப்நகரம்

நடிகர் சங்கக் கடன் கட்டப்பட்டது: விஷால்

தென்னிந்திய நடிகர் சங்க கடனை முழுமையாக அடைத்துவிட்ததாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

TOI Contributor 21 Apr 2016, 10:52 pm
தென்னிந்திய நடிகர் சங்க கடனை முழுமையாக அடைத்துவிட்ததாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil south indian actors association loan has been repaid vishal
நடிகர் சங்கக் கடன் கட்டப்பட்டது: விஷால்


தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்றதில் இருந்து அதிரடியாக நடிகர் சங்கத்தை கட்டுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் முதல் கட்டமாக கடந்த ஞாயிற்றுக் கிழமை சென்னையில் நட்சத்திரப் போட்டி நடத்தினர். இதன் மூலம் கிடக்கும் வருமானத்தைக் கொண்டு சங்கக் கட்டிடம் கட்டப் போவதாக தெரிவித்து இருந்தனர்.

முன்னதாக சங்க உறுப்பினர்களான விஷால், நாசர், கார்த்தி உள்ளிட்டோர் எஸ்.பி.ஐ.சினிமாவிடம் பேசி கடன் வாங்கி நடிகர் சங்க நிலத்தை மீட்டனர். நட்சத்திர கிரிக்கெட் வருவாய் மூலம் கடனை அடைத்துவிட்டதாக விஷால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விஷால் கூறுகையில், ''ஐசரி சாரிடமிருந்து கடனாக வாங்கிய 2 கோடி ரூபாய் கடனை அடைத்துவிட்டோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். முதல்கட்ட தொகையாக 9 லட்ச ம் ரூபாய் கொடுக்க முன் வந்த இவருக்கு நன்றியை தெரிவிக்கிறேன்.

நடிகர்சங்கம் கடனிலிருந்து மீட்டப்பட்டுவிட்டது. நடிகர் சங்க வரலாற்றிலேயே முதல் முறையாக, சங்க நிலம் கைக்கு வந்துவிட்டது மட்டுமில்லாமல், 8 கோடிரூபாய் அறக்கட்டளை கணக்கில் இருக்கிறது. இதற்காக அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ” என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்