ஆப்நகரம்

கமிஷனரிடம் மனு அளித்த நடிகர் சங்க நிர்வாகிகள்!

கமிஷனரிடம் மனு அளித்த நடிகர் சங்க நிர்வாகிகள்!

TNN 22 Nov 2016, 7:13 pm
தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் பற்றி சங்க நிர்வாகிகள் சென்னை போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்துள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் வருகிற 27ம் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளைநடிகர் சங்கம் சார்பில் சங்க நிர்வாகிகள் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் நாசர், பொன்வண்ணன், கருணாஸ், விஷால், கார்த்தி ஆகியோர் செய்துவருகின்றனர். அதேநேரத்தில் பொதுக்குழு நடத்துவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தும், தடைவிதிக்க கோரியும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
Samayam Tamil south indian actors association members gave petition to commissioner office
கமிஷனரிடம் மனு அளித்த நடிகர் சங்க நிர்வாகிகள்!


இந்நிலையில் பொன்வண்ணன், கார்த்தி தலைமையிலான நடிகர் சங்க நிர்வாகிகள் இன்று சென்னை
போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து மனுஅளித்துள்ளனர். பின்னர் செய்தியாளர்களிடம் சங்க
துணைத்தலைவர் பொன்வண்ணன் கூறியதாவது: ‘’நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இம்மாதம்
27-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக அனுமதி கேட்டிருந்தோம். மேலும் பொதுக்குழு
கூட்டம்சிறப்பாக எந்த பிரச்னையும் இன்றி நடைபெற கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று
சென்னை ஆணையரை சந்தித்து மனு கொடுத்துள்ளோம்’’என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்