ஆப்நகரம்

நடிகர் சங்கத் தேர்தல் நடக்காது - ராதாரவி பரபரப்பு!

நடிகர் சங்கத் தேர்தல் கண்டிப்பாக நடக்காது என்று நடிகர் ராதாரவி பரபரப்பாக பேசியுள்ளார்.

Samayam Tamil 10 Jun 2019, 10:21 am
நடிகர் சங்கத் தேர்தல் கண்டிப்பாக நடக்காது என்று நடிகர் ராதாரவி பரபரப்பாக பேசியுள்ளார்.
Samayam Tamil ravi


தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.விஷாலின் பாண்டவர் அணிக்கு எதிராக கே.பாக்யராஜ் மற்றும் டாக்டர் ஐசரி கே கணேஷ் தலைமையின் கீழ் உருவாகியிருக்கும் ஒரு புதிய அணி இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. கடந்த முறை விஷால் எதிரணியாக இருந்த ராதாரவி தற்போதைய நிலவரங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

விஷாலுக்கு எதிராக இப்போது எல்லோரும் திரும்பி விட்டார்கள்

கடந்த முறை எங்களுக்கு எதிராக போட்டியிட்ட விஷால் அணி மாற்றம் தேவை என்றார்கள். நான் மாற்றம் வரலாம் ஏமாற்றம் வரக்கூடாது என்றேன். இப்போது அது தான் நடந்திருக்கிறத்து. விஷால் மீது ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது எங்களுக்கு எதிராக அவருக்கு ஆதரவாக நின்ற அனைவரும் இப்போது அவருக்கு எதிராக நிற்கிறார்கள்.

கடந்த முறை ரஜினிதேர்தலில் ஓட்டு போட்டபோது யார் ஜெயித்தாலும் மூன்று ஆண்டுகளில் சொன்னதை நிறைவேற்ற வேண்டும் என்றார். இப்போது அவர்கள் ஒன்றையும் நிறைவேற்றாத ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த அணி பொய்களை கூறி ஜெயித்த அணி.

எதற்கெடுத்தாலும் விஷாலை முன்னிலைப்படுத்தி முன்னிலைப்படுத்தி இப்போது அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இது நடக்கும் என்று முன்பே கூறினேன். இன்னும் நிறைய வேடிக்கைகள் காத்திருக்கிறது. 23 ம் தேதி கண்டிப்பாக தேர்தல் நடக்காது. அவர்கள் நடத்திய கலைநிகழ்ச்சிகளுக்கு முறையான கணக்கு தாக்கல் செய்யவில்லை. நிறைய குளறுபடிகள் நடந்திருக்கிறது. இந்த தேர்தல் காண்டிப்பாக நடக்காது என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்