ஆப்நகரம்

நடிகர் சங்கம் தேர்தல் முடிவு அறிவிக்க முடியாது நீதிமன்றம் அறிவிப்பு!

நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அதன் முடிவை இன்று வெளியிடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 8 Jul 2019, 4:31 pm
தெனிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த (ஜூன் 23, 2019) அன்று சென்னை மையிலாப்பூரில் உள்ள புனித எபாஸ் மேல்நிலை பள்ளியில் பல பிர்ச்சனைககளுக்கு நடுவே நடந்து முடிந்தது. பதிவாளர் சங்கம் தேர்தலுக்கு எதிராக தடை விதிக்கஉச்சநீதிமன்றத்தை விஷால் குழு அணுகி தேர்தலை நடத்த அனுமதி வாங்கியது.உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கில்தனக்கு சாதகமாக தீர்ப்பு வர ஐசரி கணேஷ்லஞ்சம் கொடுக்க முயன்றதாக சர்ர்சை எழுந்தது. இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.
Samayam Tamil election


திடீரென தேர்தல் வைக்கப்பட்டதால் வெளியூரில் வசிக்கும் பலர் ஓட்டுபோட வர முடியாத சூழ்நிலை உருவானதாக குற்றச்சாட்டு எழுந்தது. பல சர்ர்சைகளுடன் நடந்த தேர்தலில் மொத்தமாக 1604 ஓட்டுக்கள் பதிவானது. இதில் நாசர் தலைமையில் , விஷால் முன்னிலையில் பாண்டவர் அணியும், பாக்கியராஜ் தலைமையில், ஐசரி கணேஷ் முன்னிலையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டனர்.

தேர்தல் முடிந்து ஓட்டுஎண்ணிக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டது. வாக்குப்பதிவு நடத்தப்பட்ட நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்ய கோரிய வழக்கை விசாரித்த நீதிபதிகள் விஷால் தரப்பிலான கோரிக்கையை நிராகரித்தனர். நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு அனுமதி கோரியிருந்தது விஷால் தரப்பு. நீதிபதி ஆதிகேசவலு, தபால் வாக்குகள் தொடர்பாக பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் தற்போது வாக்கு எண்ணிக்கையை நடத்த உத்தரவிட முடியாது என்றும் தெரிவித்தார்.

நடிகர்சங்க வழக்குவரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்கத் தேர்தல் முடிவு எப்போது என்பது வரும் வெள்ளிக்கிழமைக்கு பின்பே தெரியும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்