ஆப்நகரம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வரும் செளகார் ஜானகி!

சந்தானத்தின் நடித்து வரும் 'வித்தைக்காரன்' படத்தில் பழம் பெரும் நடிகை செளகார் ஜானகி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Samayam Tamil 21 Oct 2019, 2:39 pm
பூமராங் படத்தை தொடர்ந்து இயக்குநர் ஆர். கண்ணன் அடுத்ததாக சந்தானத்தை வைத்து படம் இயக்குகிறார்.
Samayam Tamil 69113415


'வித்தைக்காரன்' என்று தலைப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை ஆர்.கண்ணனின் மசாலா பிக்ஸ் நிறுவனம் மற்றும் எம்.கே.ஆர்.பி புரொடக்ஷனும் இணைந்து தயாரிக்கின்றன. முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. இதில் ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர்.

கஜா புயல் பாதிப்பு: 10 குடும்பங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்த ரஜினி

இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கி, திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வருகிறது.இந்த நிலையில் இதில் பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படம் அவரின் 400ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து இயக்குநர் ஆர்.கண்ணன் கூறியதாவது, 'இந்த படத்தில் சந்தானத்துடன் நடிக்க செளகார் ஜானகியை அழைத்த போது எனக்கு வயது ஆகிவிட்டது, அதனால் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டேன் என்றார். பின்பு கதையை கேளுங்கள் என்று பெங்களூருவில் உள்ள சவுகார் ஜானகி வீட்டிற்குச் சென்றோம்.

அசுரன் படத்தை புகழ்ந்து தள்ளிய மகேஷ் பாபு! உற்சாகத்தில் தனுஷ் ரசிகர்கள்

படத்தின் கதை பிடித்துப் போக, உடனே நடிக்க சம்மதித்தார். இதில் சந்தானம், சவுகார் ஜானகியின் நகைச்சுவை காட்சிகள் பெரிய அளவில் பேசப்படும்' என்றார்.

இது தவிர சந்தானம், கார்த்திக் யோகி இயக்கும் 'டிக்கிலோனா' படத்தில் நடிக்கிறார். மேலும் சந்தானம் நடித்துள்ள 'டகால்டி' , 'சர்வர் சுந்தரம்' ஆகிய படங்கள் வெளியீட்டுக்காக தயாராக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்