பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி அவரது சொந்த ஊரில் உள்ள கோயில் குளத்தை தூர்வார நிதி உதவி செய்கிறார்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பிறந்த ஊர், ஆந்திர மாநிலத்தில் உள்ள கோனேட்டம்பேட்டை. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிபட்டியில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் இது உள்ளது. தங்கள் மண்ணின் மைந்தனான எஸ்.பி.பி.யின் பிறந்தநாளை சமீபத்தில் இந்த கிராம மக்கள் எளிமையாகக் கொண்டாடி உள்ளனர்.
அதில், தன்னுடைய குடும்பத்தினருடன் கலந்து கொண்டார் எஸ்.பி.பி. அப்போது கிராம மக்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசிய அவர், ‘’இந்த கிராமத்திற்கென நான் இதுவரை எதுவும் செய்தது இல்லை. ஆனால், இந்த கிராம மக்கள் என்மீது வைத்திருக்கும் பாசம் அளவில்லாதது.
இங்குள்ள மக்கள் என்னை பிரபல பாடகர் எஸ்பிபி., என்று பார்க்காமல், கோணேட்டம்பேட்டை மணியாகப் பார்த்தால் சந்தோஷப்படுவேன். நான் பிறந்த இந்த கிராமத்திற்கு, ஏதாவது செய்ய ஆசைப்படுகிறேன். இங்குள்ள துலக்காணத்தம்மன் கோயில் குளம் தூர்ந்துபோய் காணப்படுகிறது. அதைத் தூர்வார உதவி செய்வேன்” என்று பேசி, கிராம மக்களை நெகிழச் செய்துள்ளார்.
Singer SP Balasubhramaniam helping to revamp temple pond in his native village in Andhra Pradesh.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பிறந்த ஊர், ஆந்திர மாநிலத்தில் உள்ள கோனேட்டம்பேட்டை. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிபட்டியில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் இது உள்ளது. தங்கள் மண்ணின் மைந்தனான எஸ்.பி.பி.யின் பிறந்தநாளை சமீபத்தில் இந்த கிராம மக்கள் எளிமையாகக் கொண்டாடி உள்ளனர்.
அதில், தன்னுடைய குடும்பத்தினருடன் கலந்து கொண்டார் எஸ்.பி.பி. அப்போது கிராம மக்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசிய அவர், ‘’இந்த கிராமத்திற்கென நான் இதுவரை எதுவும் செய்தது இல்லை. ஆனால், இந்த கிராம மக்கள் என்மீது வைத்திருக்கும் பாசம் அளவில்லாதது.
இங்குள்ள மக்கள் என்னை பிரபல பாடகர் எஸ்பிபி., என்று பார்க்காமல், கோணேட்டம்பேட்டை மணியாகப் பார்த்தால் சந்தோஷப்படுவேன். நான் பிறந்த இந்த கிராமத்திற்கு, ஏதாவது செய்ய ஆசைப்படுகிறேன். இங்குள்ள துலக்காணத்தம்மன் கோயில் குளம் தூர்ந்துபோய் காணப்படுகிறது. அதைத் தூர்வார உதவி செய்வேன்” என்று பேசி, கிராம மக்களை நெகிழச் செய்துள்ளார்.
Singer SP Balasubhramaniam helping to revamp temple pond in his native village in Andhra Pradesh.