ஆப்நகரம்

எஸ்பிபி இறுதிச் சடங்கு துவங்கியது.. ரசிகர்கள் கண்ணீரால் அஞ்சலி

பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் இறுதி சடங்குகள் சற்று முன்பு துவங்கியது.

Samayam Tamil 26 Sep 2020, 11:50 am
பல ஆயிரம் பாடல்கள் பாடி, பல கோடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து இருக்கும் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் மறைவு இந்திய சினிமா துறைக்கு பெரிய அதிர்ச்சியை அளித்து உள்ளது. சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
Samayam Tamil SPB


எஸ்பிபியின் உடல் திருவள்ளூர் தாமரைப் பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். இயக்குனர் பாரதிராஜா, பாடகர் மனோ உள்ளிட்ட பலர் நேரில் வந்து தங்கள் அஞ்சலியை செலுத்தினர். பிரபலங்கள் பலர் வந்திருந்தாலும், பொதுமக்கள் அதிகம் கூடிவிடக்கூடாது என்பதற்காக போலீசார் குறைந்த நபர்களை மட்டுமே அனுமதித்து உள்ளனர். உறவினர்கள் மட்டுமே எஸ்பிபி உடல் அருகில் இருக்க அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது எஸ்பிபியின் இறுதிச் சடங்குகள் நடைபெற துவங்கி உள்ளது. அதன் வீடியோ இதோ..


மேலும் நடிகர் அர்ஜுன் சற்றுமுன் நேரில் வந்து தனது இறுதி அஞ்சலியை செலுத்தி உள்ளார். அதன் வீடியோ இதோ..

அடுத்த செய்தி

டிரெண்டிங்