ஆப்நகரம்

எஸ்பிபி-க்கு முழு அரசு மரியாதை: கோரிக்கையை ஏற்று முதல்வர் அறிவிப்பு

பாடகர் எஸ்பிபி-யின் உடல் முழு அரசு மரியாதை உடன் அடக்கம் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 25 Sep 2020, 8:34 pm
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் தன் காந்த குரலால் அனைவரையும் ஈர்த்த எஸ்பி பாலசுப்ரமணியத்தின் மறைவு அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலனால் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Samayam Tamil SPB


எஸ்பிபி யின் உடல் தற்போது சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது. அவருக்கு ரசிகர்கள் மற்றும் ஒரு சில பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

எஸ்பிபி-யின் இறுதி சடங்குகள் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், அவரது உடலை அரசு மரியாதை உடன் அடக்கம் செய்ய வேண்டும் என சினிமா துறையினர் கோரிக்கை வைத்திருக்கின்றனர். கமல்ஹாசன், எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் இந்த கோரிக்கையை வைத்திருந்தனர்.

இயக்குனரும் நடிகருமான மனோபாலா பதிவிட்டு இருக்கும் ட்விட்டில் "அரசுக்கு ஒரு சின்ன விண்ணப்பம்..
எங்கள் SPB அண்ணாவுக்கு அரசு மரியாதையோடு அவரை அடக்கம் செய்தால் மரியாதை..6 தேசிய விருதுகள்...எக்கசக்க விருதுகள்...பரீசிலிக்க வேண்டுகிறேன்.." என குறிப்பிட்ட இருக்கிறார்.


இந்நிலையில் சற்று முன்பு தமிழக முதல்வர் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில் எஸ்பிபியின் உடல் முழு அரசு மரியாதை உடன் அடக்கம் செய்யப்படும் என அறிவித்துள்ளார். இதனை சினிமா துறையினர் வரவேற்று உள்ளனர்.

ஐம்பது ஆண்டு கால சினிமா பயணத்தில் அவர் 40 ஆயிரத்திக்கும் அதிகம் பாடல்கள் பாடி இருக்கிறார். கோடி கணக்கில் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருக்கு இது சிறந்த மரியாதையாக இது இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்