ஆப்நகரம்

பிரதமர் வீட்டில் என் செல்போனை வாங்கிட்டாங்க, இவங்க மட்டும் எப்படி செல்ஃபி?: எஸ்.பி.பி. வருத்தம்

எஸ்.பி. பாலசுப்ரிமணியம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருப்பது குறித்து தான் பெரிய விவாதமே நடந்து கொண்டிருக்கிறது.

Samayam Tamil 3 Nov 2019, 1:11 pm
பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் ஃபேஸ்புக்கில் ரொம்ப ஆக்டிவாக இருப்பவர். அவர் கடந்த மாதம் 29ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அளித்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
Samayam Tamil spb


நிகழ்ச்சி குறித்து எஸ்.பி.பி. தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

அக்டோபர் மாதம் 29ம் தேதி நான் பிரதமர் தனது வீட்டில் அளித்த விருந்தில் கலந்து கொண்டேன். அங்கு நுழைவாயிலில் இருந்த பாதுகாவலர்கள் எங்களின் செல்போன்களை வாங்கிக் கொண்டு அதற்கான டோக்கன் கொடுத்தார்கள்.



ஆனால் அதே நாளில் ஸ்டார்கள் பிரதமருடன் செல்ஃபிக்கள் எடுத்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

காஜலுக்கு மாப்பிள்ளை ரெடி, நீங்க எதிர்பார்த்தவரே தான்

எஸ்.பி.பி.யின் ஃபேஸ்புக் போஸ்ட்டை பார்த்த நெட்டிசன்கள் கூறியிருப்பதாவது,

பிரதமர் அவர்கள் பாலிவுட் பிரபலங்களுடன் செல்ஃபி எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். எவ்வளவு பிசியாக இருந்தாலும் அவர்களுக்கு மட்டும் ஸ்பெஷலாக நேரம் ஒதுக்கி செல்ஃபி எடுக்கிறார்.

உங்களின் செல்போனை வாங்கி வைத்ததிலும் ஆச்சரியம் இல்லை, பாலிவுட்காரர்களுக்கு மட்டும் செல்போனை வைத்திருக்க அனுமதி அளித்ததிலும் வியப்பு இல்லை.

சூசகமாக போஸ்ட் போட்ட சனம்: தர்ஷனுடன் பிரேக்கப்பா?

இதற்கு பெயர் தான் ஓரவஞ்சனை. விருதுகள் விஷயத்தில் மட்டும் அல்ல செல்ஃபி விஷயத்தில் கூட தென்னிந்தியா ஒதுக்கப்படுகிறது. உங்களுக்கு யாருடனும் செல்ஃபி எடுத்து விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை.

உங்களின் செல்ஃபி எங்கள் மனதில் உள்ளது. பல்லாயிரம் பாடல்களை பாடியவருக்கே இந்த நிலைமை என்றால் பாமரர்களை பற்றி சொல்லவே வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்