ஆப்நகரம்

எஸ்.ஜானகி பற்றி வதந்தி.. என்ன நான்சென்ஸ் இது! எஸ்பிபி கோபமாக பேசியுள்ள வீடியோ

பாடகி ஜானகி இறந்து விட்டதாக வதந்தி பரப்பியவர்களை பற்றி கோபத்துடன் பேசி உள்ளார் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம்.

Samayam Tamil 29 Jun 2020, 1:16 pm
பிரபல பாடகி எஸ் ஜானகி இறந்துவிட்டார் என நேற்று திடீரென தகவல் பரவ ஆரம்பித்தது. இது அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இது முற்றிலும் பொய்யான ஒரு தகவல் என்பது அவரது குடும்பத்தினர் விளக்கம் கொடுத்த பிறகுதான் தெரியவந்தது.
Samayam Tamil S Janaki and SPB


சமூக வலைத்தளத்தில் யாரோ சிலர் இது போன்ற வதந்தியை கிளப்பி விட்டுள்ளனர். எஸ்.ஜானகி இறந்துவிட்டதாக செய்தி வருவது இது முதல் முறையல்ல. பல வருடங்களுக்கு முன்பு இருந்தே இது போன்ற செய்திகள் அடிக்கடி வருகின்றன. அவரது குடும்பத்தினரும் அவர் நலமுடன் இருக்கிறார் இறக்கவில்லை என விளக்கம் கொடுத்து வருகின்றனர்.

நேற்று ஜானகி உடல் நலக் குறைவால் இறந்துவிட்டார் என்ற செய்தி பரவியதும் அவரது மகன் முரளி கிருஷ்ணா பேட்டி அளித்துள்ளார். இது முற்றிலும் பொய்யான செய்தி ஜானகிக்கு சமீபத்தில் தான் ஒரு அறுவை சிகிச்சை நடந்தது. தற்போது அவர் ஓய்வில் இருக்கிறார் என தெரிவித்திருக்கிறார்.

இப்படி பாடகி எஸ் ஜானகி பற்றி தொடர்ந்து வதந்தி பரப்புபவர்கள் பற்றி பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பின்னணிப் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் இதுதொடர்பாக ஒரு வீடியோவையும் முகநூலில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது..

"இன்று காலையில் இருந்து சுமார் இருபது கால்கள் எனக்கு வந்துவிட்டது. ஜானகி அம்மா எப்படி இருக்கிறார்கள் என்பது பற்றி தான் போன் செய்கிறார்கள். சமூக வலைத்தளத்தில் எப்படியோ ஒருவர் ஜானகி அம்மா உயிருடன் இல்லை என செய்தி பரப்பியுள்ளார். என்ன முட்டாள்தனமான விஷயம் இது? என்ன முட்டாள்தனம்.. நான் அவருடன் பேசினேன். அவர் மிக மிக மிக நன்றாகவே இருக்கிறார். என்ன நடக்கும் என்றால் யாராவது ஒருவர் ஒரு கலைஞரை மிகவும் மனப்பூர்வமாக விரும்பினால், அவர்களுக்கு இது மாரடைப்பை கொடுத்திருக்கலாம். சமூக வலைதளங்களில் தயவு செய்து பாசிட்டிவிட்டியை பரப்புவதற்காக மட்டும் பயன்படுத்துங்கள். இது போன்ற விஷயங்களில் ஃபன் செய்யாதீர்கள். சமூக வலைத்தளங்களை இது போன்ற மோசமான விஷயங்களுக்காக பயன்படுத்தாதீர்கள். தயவு செய்து.. ஜானகி அம்மா நீடூழி வாழட்டும். அவர் நல்ல பாதுகாப்பாக, உடல் நலத்துடனும் இருக்கிறார். ஏன் இது போன்ற விஷயங்கள் செய்தீர்கள் ஜென்டில்மேன்? உங்களை ஜென்டில்மேன் என சொல்லலாமா? கடவுள் நம் எல்லோரையும் ஆசீர்வதிக்கட்டும்" என எஸ்பி பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.


இதுவரை சுமார் 60 வருடங்களாக சினிமா துறையில் பாடகியாக இருக்கும் ஜானகி தற்போது வரை கிட்டத்தட்ட 45 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி உள்ளார். அவரது மயக்கும் குரலுக்கு அதிக ரசிகர்கள் நாடு முழுஅத்தும் இருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய மொழிகள் பலவற்றிலும் பாடியுள்ள அவர் வெளிநாட்டு மொழிகளிலும் பாடல்களை பாடி உள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்