ஆப்நகரம்

பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தாயார் சகுந்தலம்மா இன்று காலமானார்

பிரபல தென்னிந்திய திரையிசைப் பாடகரும், நடிகருமான எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் தாயார் சகுந்தலம்மா இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 89.

Samayam Tamil 4 Feb 2019, 1:46 pm
பிரபல தென்னிந்திய திரையிசைப் பாடகரும், நடிகருமான எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் தாயார் சகுந்தலம்மா இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 89.
Samayam Tamil எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தாயார் சகுந்தலம்மா மரணம்


ஆந்திரா மாநிலம் நெல்லூரில் வசித்து வந்த சகுந்தலம்மா, கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது.


பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இசைக் கச்சேரிக்காக வெளிநாடு சென்றுள்ளார். தற்போது அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அவர் இன்று இந்தியா திரும்புவார் என்று உறவினர்கள் கூறினர்.

நெல்லூரில் வைக்கப்பட்டுள்ள சகுந்தலம்மா உடலுக்கு குடும்ப உறவினர்கள், திரைத்துறையினர், நண்பர்கள் எனப் பலரும் இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர். நடிகர் பாலசுப்பிரமணியம் குடும்பத்தினரும் அங்கு தான் உள்ளனர்.

நெல்லூரில் சகுந்தலம்மா உடலுக்கு இன்று மாலை இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. குடும்ப முறைப்படி, அவரது உடல் தகனம் செய்யப்படும் என எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உறவினர்கள் தகவல் கூறியுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்