ஆப்நகரம்

பாசிட்டிவ், நெகட்டிவ் முக்கியம் இல்லை, அப்பா லைஃப் சப்போர்ட்டில் தான் இருக்கார்: எஸ்.பி. பி. மகன்

எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தற்போதைய பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

Samayam Tamil 24 Aug 2020, 1:21 pm
பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு கடந்த 5ம் தேதியில் இருந்து மருத்துவமனையில் இருக்கிறார். கடந்த 12ம் தேதியில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்தார்.
Samayam Tamil sp balasubrahmanyam


அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து திரையுலகை சேர்ந்தவர்களும், இசை ரசிகர்களும் சேர்ந்து எஸ்.பி. பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைய வேண்டி கூட்டுப் பிரார்த்தனை செய்தார்கள்.

அதன் பிறகு எஸ்.பி.பி.யின் நிலைமை சீராக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்தது. எஸ்.பி.பி.யின் உடல்நலம் பற்றி அவரின் மகன் சரண் தினமும் அப்டேட் கொடுத்து வந்தார். அவர் அப்டேட் கொடுப்பதை நிறுத்தியதை பார்த்த ரசிகர்கள் கவலை அடைந்தனர்.

சரண் அப்டேட் கொடுக்காதது ஏன்?: கவலையில் எஸ்.பி. பி. ரசிகர்கள்

இந்நிலையில் தற்போது செய்யப்பட்ட பரிசோதனையில் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இந்த நல்ல தகவலை சரண் தான் தெரிவித்திருக்கிறார். பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்தாலும் அப்பாவுக்கு இன்னும் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது என்று சரண் மேலும் கூறியுள்ளார்.

எஸ்.பி.பி.க்கு கொரோனா பாதிப்பு குணமாக வேண்டும் என்று தினமும் பிரார்த்தனை செய்து வந்த ரசிகர்களுக்கு இது நிச்சயம் மகிழ்ச்சியை அளிக்கும். சீக்கிரம் வா பாலு என்று இசைஞானி இளையராஜா, இயக்குநர் இமயம் பாரதிராஜா ஆகியோர் தெரிவித்தது போன்று அவர் வீடு திரும்பவிருக்கிறார்.

எஸ்.பி.யின் நிலைமை சீராக இருக்கிறது ஆனாலும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் தான் இருக்கிறார் என்று முன்பு மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டபோது எல்லாம் ரசிகர்கள் கவலை அடைந்தார்கள். அப்பாவின் நிலையில் பெரிதாக முன்னேற்றம் இல்லை என்று சரண் கூறியதை கேட்டு ரசிகர்களின் முகம் வாடியது.

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மீண்டு வர வேண்டும், மீண்டும் பாட வேண்டும், அவர் குரலை கேட்க வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்தார்கள். அவர்களின் பிரார்த்தனை வீண் போகவில்லை. எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தை மருத்துவமனையில் சேர்த்ததில் இருந்து இசை ரசிகர்கள் தினமும் சிறிது நேரமாவது அவரின் பாடல்களை ஒலிக்கச் செய்து பிரார்த்தனை செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்