ஆப்நகரம்

எஸ்.பி.பி.யின் கடைசி வீடியோ: அவர் பிசியோ செய்வதை பார்த்து ரசிகர்கள் கண்ணீர்

மருத்துவமனையில் எஸ்.பி.பி. பிசியோதெரபி செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

Samayam Tamil 25 Sep 2020, 9:36 pm
கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் 5ம் தேதி சென்னையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த மாதம் 13ம் தேதி அவரின் நிலைமை மோசமானது.
Samayam Tamil spb


அதன் பிறகு அவர் தேறி வந்தார். இந்நிலையில் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் பிசியோதெரபி செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

எஸ்.பி.பி.யை மருத்துவர்கள் ஊக்குவிப்பதை பார்த்த ரசிகர்களுக்கு கண்ணீர் தான் வருகிறது. மேலும் எஸ்.பி.பி. மருத்துவமனையில் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பலரும் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த வீடியோ மற்றும் புகைப்படத்தை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,
எப்படி கம்பீரமாக இருந்த மனிதர் இப்படி ஆகிவிட்டாரே. இனி அவரை பார்க்கவே முடியாது என்பது வேதனையாக இருக்கிறது. ஆனால் எஸ்.பி.பி. இறந்தாலும் அவர் பாடிய பாடல்கள் என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும். எஸ்.பி.பி.யின் குரலுக்கு மரணமே இல்லை.

எஸ்.பி.பி.யின் குரல் ஒலிக்கும் வரை அவர் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார் என்று தெரிவித்துள்ளனர்.

SPB மக்களுக்காகப் பாடியது போதும் என்னிடம் பாட வா என இறைவன் அழைத்துக் கொண்டான்: சிவகுமார்

அடுத்த செய்தி

டிரெண்டிங்