ஆப்நகரம்

உலகம் ஒரு சூனியமாப் போச்சு, பேச்சு வரல பாலு: இளையராஜா உருக்கம்

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இல்லாத இந்த உலகம் சூனியமாப் போச்சு என்று இளையராஜா தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 25 Sep 2020, 9:36 pm
கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மாரடைப்பால் இன்று உயிர் இழந்தார்.
Samayam Tamil ilaiyaraja


நுங்கம்பாக்கத்தில் இருக்கும் வீட்டில் அவரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகை சேர்ந்தவர்கள் எஸ்.பி.பி. பற்றி பேசி வீடியோ வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் 100 ஆண்டுகள் ஆனால் கூட எஸ்.பி.பி.யின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும்: ரஜினி

ரஜினிகாந்தும் வீடியோ வெளியிட்டார். இந்நிலையில் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துடன் சேர்ந்து பல ஆண்டுகளாக பணியாற்றிய இசைஞானி இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் இளையராஜா கூறியிருப்பதாவது,

சீக்கிரம் எழுந்து வா, உன்னைப் பார்க்க நான் காத்திருக்கிறேன் என்று நான் சொன்னேன். கேட்கல, நீ கேட்கல. போயிட்ட, எங்க போன?. கந்தர்வர்களுக்காக பாடுவதற்காக போயிட்டியா?. இங்கே உலகம் ஒரு சூனியமாப் போச்சு. உலகத்தில் ஒன்னும் எனக்கு தெரியல. பேசுறதுக்கு பேச்சு வரல. சொல்றதுக்கு வார்த்தை இல்ல. என்ன சொல்றதுனே தெரியல. எல்லா துக்கத்துக்கும் ஒரு அளவு இருக்கு. இதுக்கு அளவு இல்ல என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்