ஆப்நகரம்

எஸ்பிபியின் முதல் பாடல் இடம் பெற்ற படம் ‘அடிமைப்பெண்’ அல்ல?

பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடிய முதல் பாடல் ‘அடிமைப் பெண்’ படத்தில் அல்ல; அது ‘சாந்தி நிலையம்’ படத்தில்தான்.

TNN 23 Sep 2017, 9:31 pm
பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடிய முதல் பாடல் ‘அடிமைப் பெண்’ படத்தில் அல்ல; அது ‘சாந்தி நிலையம்’ படத்தில்தான்.
Samayam Tamil spb first tamil moive song is santhi nilayam
எஸ்பிபியின் முதல் பாடல் இடம் பெற்ற படம் ‘அடிமைப்பெண்’ அல்ல?


பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நாற்பதாயிரம் பாடல்களுக்கும் மேலாக பாடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார்.

அவர் உச்சத்தில் இருந்தகாலத்தில் ஒரே நாளில் இருபதுக்கும் மேற்பட்ட பாடல்களெல்லாம் பாடியுள்ளார்.

தமிழ் சினிமாவில் அவர் பாடிய முதல் பாடல் என்று ‘அடிமைப்பெண்’(1969) படத்தில் இடம்பெற்ற ‘ஆயிரம் நிலவே வா’ பாடல் என்பார்கள்.

ஆனால், அது இல்லையாம். அதற்கு முன்பே அவர் பாடி ரெக்கார்டிங் ஆனது ‘சாந்திநிலையம்‘ (1969) படத்தில் இடம்பெற்ற ‘இயற்கை என்னும் இளைய கன்னி’ என்ற பாடல்தான்.

ஆனால் முதலில் வெளியானது ‘அடிமைப்பெண்’ படம்தான். அதனால் அதை முதல் பாடல் என்று கூறிவருகின்றனர்.

எஸ்.பி.பி. தமிழ் படங்களில் பாடுவதற்கு முன்பே தெலுங்கு, கன்னடம் படங்களில் அதிகமானபாடல்களை பாடியிருக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்