ஆப்நகரம்

SP Balu: எஸ்.பி.பி.யின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்

பாடகர் எஸ்பிபியின் உடல்நிலை தற்போது மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 24 Sep 2020, 8:45 pm
பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் கடந்த மாத துவக்கத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தான் நலமாக இருப்பதாகவும், ஓய்வு எடுக்கவே மருத்துவமனைக்கு வந்ததாகவும் அவர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ வெளியிட்டார். ஆனால் அதன் பிறகு அவரின் உடல் நிலை மோசமாகி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். பின்னர் படிப்படியாக அவரது உடல்நிலை தேறி வருவதாக அவரின் மகன் எஸ்பிபி சரண் தினமும் அப்டேட் கொடுத்து வருகிறார்.
Samayam Tamil SPB


எஸ்பிபி உடல்நிலை தேறி வருகிறது என நேற்று முந்தினம் கூட சரண் இன்ஸ்டாகிராமில் தெரிவித்தார். இந்நிலையில், சற்று முன்பு மருத்துவமனை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் எஸ்பிபி-யின் உடல் நிலை கடந்த 24 மணி நேரத்தில் மிகவும் மோசமடைந்து கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது...

"திரு எஸ். பி. பாலசுப்ரமணியம் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து எக்மோ மற்றும் வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல் நிலை மோசமாகி அவருக்கு அதிகபட்ச Life Support வழங்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறது. அவரது உடல்நிலையை நிபுணர் மருத்துவர் குழு கூர்ந்து கவனித்து வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த செய்தி ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாக பலரும் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்