ஆப்நகரம்

‘பாகுபலி 2’ படத்தை கைமாற்றியது ஸ்ரீகிரீன் புரடெக்ஷன்ஸ்!

ஸ்ரீகிரீன் புரடெக்ஷன்ஸ் நிறுவனம் அதிக லாபம் வைத்து ‘பாகுபலி 2’ படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு கைமாற்றியுள்ளது.

TNN 14 Mar 2017, 8:04 pm
ஸ்ரீகிரீன் புரடெக்ஷன்ஸ் நிறுவனம் அதிக லாபம் வைத்து ‘பாகுபலி 2’ படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு கைமாற்றியுள்ளது.
Samayam Tamil sri green productions sells bahubali 2 to thenandal films
‘பாகுபலி 2’ படத்தை கைமாற்றியது ஸ்ரீகிரீன் புரடெக்ஷன்ஸ்!


எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கிய ‘பாகுபலி-2’ ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிவிட்டதால் இப்படத்தின் வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. ‘பாகுபலி-2’ படத்தின் தமிழக விநியோக உரிமையை சில மாதங்களுக்கு முன்னதாக ‘ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ்’ அதிக தொகை கொடுத்து வாங்கியது. இந்நிலையில், இப்படத்தின் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியா விநியோக உரிமையை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு தற்போது மிகப் பெரிய ஒரு தொகையை பெற்றுக் கொண்டு கைமாற்றியுள்ளது ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ்.

பாகுபலி முதல் பாகத்தை வாங்கிய ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா கடைசி நேரத்தில் அதை அதிக விலைக்கு ‘ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்’ நிறுவனத்துக்கு விற்றார். அதே மாதிரி இப்பவும் நடந்துள்ளது.

‘பாகுபலி’ முதல் பாகத்தை தமிழகம் முழுக்க வெளியிட்டு வசூல் அள்ளியது ‘ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்’. தற்போது ‘பாகுபலி-2’ படத்தையும் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் ‘ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்’ வெளியிடவிருக்கிறது. அதைப்போல ‘பாகுபலி-2’ படத்தின் வட ஆற்காடு மற்றும் தென் ஆற்காடு ஏரியா விநியோக உரிமையை ‘பைவ் ஸ்டார்’ நிறுவனத்திற்கு விற்கப்பட்டிருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்