ஆப்நகரம்

அவதூறாக பேசிய இயக்குநர் வாராகி மீது நடிகை ஸ்ரீரெட்டி புகார்!

தன்னை அவதூறாக பேசியதாக இயக்குநர் வராகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகை ஸ்ரீரெட்டி சென்னை காவல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

Samayam Tamil 27 Jul 2018, 5:13 pm
தன்னை அவதூறாகபேசியதாக இயக்குநர் வராகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகை ஸ்ரீரெட்டி சென்னை காவல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
Samayam Tamil 8460995333425445471 (1)


தெலுங்கு சினிமா உலகில் பட வாய்ப்புக்காக நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக குற்றம்சாட்டி, அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட நடிகை ஸ்ரீரெட்டி முன்னணி இயக்குநர் முருகதாஸ், நடனஇயக்குநர் லாரன்ஸ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் மீது புகார் கூறினார்.

இதனையடுத்துஇயக்குநர் வராகி எனபவர்ஸ்ரீரெட்டி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.அந்த புகாரில் நடிகை ஸ்ரீரெட்டிதன்னை திரைத்துறையை சேர்ந்தபலர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கூறி நடிகர்கள்மற்றும் இயக்குநர்களிடம் பணம் பறிக்கும் முயற்சியில்ஈடுப்பட்டுள்ளார்.ஆனால் ஆதாரம் கேட்டால் 3 அல்லது 4 வருடங்களுக்கு முன் நடைபெற்றது என்கிறார்.

மேலும், இவரே சம்மதித்து பலரிடம் படுக்கையை பகிர்ந்து கொண்டதாக கூறியுள்ள இவர் மீது விபச்சார பிரிவின் கீழும், மிரட்டி பணம் பறிக்கும் பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் இயக்குநர் வாராகி பேட்டியளித்த போது ஸ்ரீரெட்டி மீது சரமாரியாக குற்றசாட்டுகளை முன்வைத்தார். இந்நிலையில் தன்னை தவறாக பேசியதாக இயக்குநர் வராகி மீது சென்னை மாநகரகாவல் ஆணையர் அலுவலகத்தில்நடிகை ஸ்ரீரெட்டி புகார் அளித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்