ஆப்நகரம்

சென்னைப் பணியிடத்தில் இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை; களத்தில் இறங்கிய ஸ்ரீ ரெட்டி!

பணிபுரியும் இடத்தில் இளம்பெண்ணிற்கு அளிக்கப்பட்ட பாலியல் தொல்லை குறித்து, ஸ்ரீ ரெட்டி கொந்தளித்துள்ளார்.

Samayam Tamil 25 Aug 2018, 8:10 pm
சென்னை: பணிபுரியும் இடத்தில் இளம்பெண்ணிற்கு அளிக்கப்பட்ட பாலியல் தொல்லை குறித்து, ஸ்ரீ ரெட்டி கொந்தளித்துள்ளார்.
Samayam Tamil Sri Reddy


தெலுங்கு திரையுலகில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்படுவதாக நடிகை ஸ்ரீ ரெட்டி அதிரடியாக புகார் தெரிவித்தார். அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி நாட்டையே கொந்தளிக்கச் செய்தார். இதையடுத்து தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் புகார் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசிய நடிகை ஸ்ரீ ரெட்டி, விரைவில் ‘ரெட்டி டைரி’ என்ற பெயரில் தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக கூறினார். தான் சென்னையில் நிரந்தரமாக குடியேறப் போவதாகவும், பெண்கள் உரிமைக்காக பணியாற்ற இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் தனது பேஸ்புக் பக்கத்தில் சென்னையில் பணிபுரியும் இடத்தில் பெண்ணிற்கு அளிக்கப்பட்ட பாலியல் தொந்தரவு குறித்த புகாரைப் பதிவு செய்துள்ளார். ஒரு பெண் தனக்கு தகவல் அனுப்பியதாகவும், அதனை படம்பிடித்து பதிவிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு தொலைபேசி அழைப்பு விடுத்துள்ளார். அப்போது சிவகுமார் என்பவர் பேசியுள்ளார். அவர் சிறிய நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாகவும், இந்த சம்பவம் நடைபெற்றது குறித்து தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார். தனது நிறுவனத்திற்கு போட்டியாக இருப்பவர்கள் வேண்டுமென்றே தம் மீது குற்றம்சாட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Sri Reddy exposes sexual harassment of Chennai working girl.

அடுத்த செய்தி

டிரெண்டிங்