நடிகர் சிவகுமாரின் கல்வி அறக்கட்டளையின் 39வது ஆண்டு விழாவை முன்னிட்டு 21 மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. நடிகர் சிவகுமாரின் கல்வி அறக்கட்டளையின் 39வது ஆண்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த அறக்கட்டளையின் மூலம் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 39வது ஆண்டுவிழா சென்னை வடபழனி பிரசாத் லேப்பில் நடந்தது. இந்த விழாவின் போது, 21 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2,05000 பரிசளிக்கப்பட்டது.
அதோடு, கலை, அறிவியல் துறையிலும், விளையாட்டு துறையிலும் சிறந்த விளங்கும் மாணவ, மாணவிகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு விழாவில் சிவகுமாரின் மகள் பிருந்தா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், சிவகுமார், சூர்யா உள்பட மேலும் பலர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கியுள்ளனர்.
அதோடு, கலை, அறிவியல் துறையிலும், விளையாட்டு துறையிலும் சிறந்த விளங்கும் மாணவ, மாணவிகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு விழாவில் சிவகுமாரின் மகள் பிருந்தா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், சிவகுமார், சூர்யா உள்பட மேலும் பலர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கியுள்ளனர்.