ஆப்நகரம்

தனக்கு வந்த நிலை தன் மகள்களுக்கு வராமல் பார்த்துக் கொண்ட ஸ்ரீதேவி!

தன்னால் படிக்க முடியாமல் போனதாக வருத்தப்பட்ட ஸ்ரீதேவி தன் மகள்களை நன்றாக படிக்க வைத்துள்ளார்.

Samayam Tamil 27 Feb 2018, 4:56 pm
தன்னால் படிக்க முடியாமல் போனதாக வருத்தப்பட்ட ஸ்ரீதேவி தன் மகள்களை நன்றாக படிக்க வைத்துள்ளார்.
Samayam Tamil sridevi who has not come to her daughters
தனக்கு வந்த நிலை தன் மகள்களுக்கு வராமல் பார்த்துக் கொண்ட ஸ்ரீதேவி!


ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி 24ம் தேதி துபாயில் மாரடைப்பால் இறந்துள்ளார். அவரது உடல் இன்னும் இந்தியா வரவில்லை. துபாய் போலீசாரிடம் தற்போது விசாரனையில் உள்ளது. இறுதியாக நடிகை ஸ்ரீதேவியின் முகத்தை பார்க்க முடியவில்லையே என ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் ஒரு பக்கம் சோகத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் ஸ்ரீதேவி பல வருஷங்களாக ஒரு விஷயத்திற்காக வருத்தப்பட்டிருக்கிறாராம். அது என்னவென்றால், நடிகை ஸ்ரீதேவி 4 வயதில் சினிமாவில் அறிமுகமானார். அதிலிருந்தே அவர் நடிக்கத் தொடங்கிவிட்டார். இதனால் அவரால் பள்ளி படிப்பு, கல்லூரி படிப்பு எதுவும் தொடர முடியவில்லையாம். மற்றவர்களை போல் தன்னால் படிக்க முடியவில்லையே என அவர் நிறைய வருத்தப்பட்டிருக்கிறாராம். தனக்கு வந்த இந்த நிலை தன் மகள்களுக்கு வரக் கூடாது என்று அவரது படிப்பில் அதிக கவனம் செலுத்தினாராம் ஸ்ரீதேவி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்