ஆப்நகரம்

திருமணமான பின்பும் என்னுடன் இருந்தார் ஸ்ரீகாந்த்: ஸ்ரீரெட்டி பளீச் பேட்டி!

நடிகர் ஸ்ரீகாந்த் திருமணமான பின்பும் என்னுடன் தொடர்பில் இருந்தார் என்று நடிகை ஸ்ரீரெட்டி பேட்டியில் கூறியுள்ளார்.

Samayam Tamil 21 Jul 2018, 1:17 pm
நடிகர் ஸ்ரீகாந்த் திருமணமான பின்பும் என்னுடன் தொடர்பில் இருந்தார் என்று நடிகை ஸ்ரீரெட்டி பேட்டியில் கூறியுள்ளார்.
Samayam Tamil sri reddy


சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி தன்னுடன் உறவு வைத்தவர்கள் இவர்கள் என ஏ.ஆர். முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி. உட்பட பலரின் பெயர்களை வெளிட்டுள்ளார் பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. மேலும் பலர் இவருடைய லிஸ்ட்டில் உள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீரெட்டி ஸ்ரீகாந்த் பற்றி தன்னுடைய முகநூலில் குறிப்பிடும்போது “5 வருடங்களுக்கு முன்பு சினிமா நட்சத்திரங்கள் விளையாடிய கிரிக்கெட் போட்டிக்காக ஹைதராபாத் வந்த போது பார்க் ஹோட்டலில் உங்களை சந்தித்தேன். என்னுடன் நடனம் ஆடும்போது எனக்கு வாய்ப்பு தருவதாக கூறினாயே ஞாபகமிருக்கிறதா?” என பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் அது உண்மைதான் என மீண்டும் கூறியுள்ளார். ஸ்ரீகாந்த் அந்த விஷயத்தில் அவர் கை தேர்ந்தவர். அவரை அடித்துக்கொள்ள யாராலும் முடியாது. திருமணமான பின்பும் அவர் 2 மாதங்கள் என்னுடன் தொடர்பில் இருந்தார். அதன் பின் தொடர்பு இல்லாமல் போய்விட்டது” என ஸ்ரீரெட்டி தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்