ஆப்நகரம்

கொரோனா தொற்று: 30 லட்சம் நிதி உதவி அளித்த நடிகை ஸ்ரீப்ரியா குடும்பம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அரசுக்கு 30 லட்சம் ரூபாயை உதவியாக வழங்கியுள்ளது நடிகை ஸ்ரீப்ரியா குடும்பம்.

Samayam Tamil 1 Apr 2020, 11:10 pm
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் தமிழ்நாட்டில் 110 நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக தமிழ்நாட்டில் மொத்த எண்ணிக்கை 234 ஆக அதிகரித்துள்ளது.
Samayam Tamil Sripriya with her Husband


மேலும் இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 2000த்தை விட அதிகம். வரும் நாட்களில் எண்ணிக்கை பல மடங்கு உயரலாம் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் அரசுக்கு பல்வேறு பிரபலங்களும் உதவி செய்து வருகின்றனர். பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் PM Cares நிதிக்கு 25 கோடி ருபாய் அளித்துள்ளார். மேலும் மற்ற சினிமா துறைகளில் உள்ள நடிகர்களும் நிதி உதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை ஸ்ரீப்ரியா மற்றும் அவரது கணவர் ராஜ்குமார் சேதுபதி மற்றும் அவரது சகோதரி லதா ஆகியோர் இணைந்து 30 லட்சம் ரூபாயை நிதி உதவியாக அளித்துள்ளனர்.

தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு 15 லட்சம் ரூபாயும், பிரதமர் அறிவித்த PM Cares நிதிக்கு 15 லட்சம் ரூபாயும் அவர்கள் அனுப்பியுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்