ஆப்நகரம்

துப்பாக்கி உரிமத்துக்கு விண்ணப்பித்துள்ள நடிகை ஸ்ரீரெட்டி

தனது உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் கொடுத்துவரும் சினிமா ஃபைனான்சியர் சுப்பிரமணியம் மற்றும் அவரது உறவினர் கோபி ஆகியோர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் நடிகை ஸ்ரீ ரெட்டி புகார் அளித்துள்ளார்.

Samayam Tamil 26 Mar 2019, 5:01 pm
நடன இயக்குநர் ராகவா லாரன்ஸ், நடிகர் நானீ, இயக்குநர் முருகதாஸ், சுந்தர் சி ஆகியோர் தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி உறவு கொண்டனர். பின்னர் பட வாய்ப்பு தராமல் ஏமாற்றினர் என சில மாதங்களுக்கு முன்னர் சர்ச்சை கருத்து வெளியிட்டு மீடியாக்களில் வைரலான நடிகை ஸ்ரீரெட்டி.
Samayam Tamil sri reddy


தற்போது தனது உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் கொடுத்துவரும் சினிமா ஃபைனான்சியர் சுப்பிரமணியம் மற்றும் அவரது உறவினர் கோபி ஆகியோர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் நடிகை ஸ்ரீ ரெட்டி புகார் அளித்துள்ளார்.

சுப்பிரமணியம் மீதான ஒரு வழக்கின் விசாரணையில் தான் சில தகவல்களை காவல்துறையிடம் சொன்னதாகவும் அதனால் தனது வீட்டுக்குவந்த அவ்விருவரும் தன்னிடம் தகராறில் ஈடுபட்டதாகவும்கூறி சிசிடிவி காட்சிகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து தனக்கு அச்சுறுத்தல் செய்துவருவதால் துப்பாக்கி உரிமம் கேட்டு விண்ணப்பித்திருப்பதாகவும் கூறியுள்ள நடிகை ஸ்ரீ ரெட்டி, அவர்கள் மீது ஏற்கெனவே காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது மாநில மனித உரிமைகள் ஆணையம் தலையிட்டு விசாரணை நடத்தவேண்டும் எனவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்