நடிகர் அர்ஜூன் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ள நடிகை ஸ்ருதி ஹரிஹரன் புதிய கன்னட படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கால்ஷீட் பிரச்னை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழு விளக்கமளித்துள்ளது.
தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட நடிகை ஸ்ருதி ஹரிஹரன், கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் விஸ்வமயா என்ற படத்தில் நடித்த போது, அப்பட நாயகன் அர்ஜூன் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக புகார் எழுப்பியுள்ளார்.
தற்போது, இவர் தற்போது பெங்களூரு கப்பன் பார்க் காவல் நிலையத்தில் நடிகர் அர்ஜூன் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளார். அதை தொடர்ந்து நடிகர் அர்ஜூன் ஸ்ருதி ஹரிஹரனிடன் நஷ்ட ஈடு கோாி வழக்கு தொடர்ந்தார்.
மேலும் கன்னட திரைப்பட வா்த்தக சபை அா்ஜூனையும், ஸ்ருதி ஹரிஹரனையும் நேரில் சந்திக்க வைத்து பேச்சுவாா்த்தை நடத்த உள்ளதாக அறிவித்தது. ஆனால் அதற்கான முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அடுத்து நடிக்க இருந்த ”தாரி தப்சித்ட்சனா தேவரு” என்ற படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து படத்தில் இயக்குநர் லிங்கதேவ்ரு கூறும்போது, 45 நாட்கள் இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் நடைபெற இருந்தன.
ஆனால், ஜனவரி மாதத்திற்கு பிறகு ஸ்ருதி அர்ஜூன் மீதான வழக்குகளுக்கு வேண்டி நீதிமன்றம் செல்லவுள்ளதால், இந்த படத்தில் நடிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டார். அதனாலே அவரை படத்திலிருந்து நீக்க வேண்டியதாகி விட்டது என்று கூறினார்.
தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட நடிகை ஸ்ருதி ஹரிஹரன், கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் விஸ்வமயா என்ற படத்தில் நடித்த போது, அப்பட நாயகன் அர்ஜூன் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக புகார் எழுப்பியுள்ளார்.
தற்போது, இவர் தற்போது பெங்களூரு கப்பன் பார்க் காவல் நிலையத்தில் நடிகர் அர்ஜூன் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளார். அதை தொடர்ந்து நடிகர் அர்ஜூன் ஸ்ருதி ஹரிஹரனிடன் நஷ்ட ஈடு கோாி வழக்கு தொடர்ந்தார்.
மேலும் கன்னட திரைப்பட வா்த்தக சபை அா்ஜூனையும், ஸ்ருதி ஹரிஹரனையும் நேரில் சந்திக்க வைத்து பேச்சுவாா்த்தை நடத்த உள்ளதாக அறிவித்தது. ஆனால் அதற்கான முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அடுத்து நடிக்க இருந்த ”தாரி தப்சித்ட்சனா தேவரு” என்ற படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து படத்தில் இயக்குநர் லிங்கதேவ்ரு கூறும்போது, 45 நாட்கள் இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் நடைபெற இருந்தன.
ஆனால், ஜனவரி மாதத்திற்கு பிறகு ஸ்ருதி அர்ஜூன் மீதான வழக்குகளுக்கு வேண்டி நீதிமன்றம் செல்லவுள்ளதால், இந்த படத்தில் நடிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டார். அதனாலே அவரை படத்திலிருந்து நீக்க வேண்டியதாகி விட்டது என்று கூறினார்.