ஆப்நகரம்

Me Too: அர்ஜூன் கைது செய்யப்படுவாரா? ஜாமீனில் வெளிவராத முடியாத வகையில் வழக்குப் பதிவு!

ஆக்ஷன் கிங் அர்ஜூன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்று நடிகை ஸ்ருதி ஹரிஹரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Samayam Tamil 27 Oct 2018, 3:26 pm

ஹைலைட்ஸ்:

ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்று நடிகை ஸ்ருதி ஹரிஹரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil action king.
ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்று நடிகை ஸ்ருதி ஹரிஹரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் கிங் என்றழைக்கப்படும் அர்ஜூன் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ள நடிகை ஸ்ருதி ஹரிஹரன், மேலும் பல நடிகைகளுக்கு அவரால் பாலியல் தொந்தரவு ஏற்பட்டுள்ளதாக மீண்டும் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். சமீபத்தில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘ நிபுணன்’ படத்தில் நடித்த போது நடிகர் அர்ஜூன் தன்னை இறுக்கமாக கட்டிப்பிடித்து பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்று தெரிவித்திருந்தார்.

அப்போது அவர், நடிகர் அர்ஜூன் இதே போன்ற தொந்தரவுகளை, மற்ற நடிகைகளுக்கு வழங்கியதாகவும் தெரிவித்தார். ஆனால் அவர்கள் புகார் கொடுக்க தைரியமில்லாமல், அடையாளத்தை மறைத்துக் கொண்டு இருப்பதாக கூறினார்.

ஸ்ருதி ஹரிஹரன்

#MeToo அர்ஜுன் பல நடிகைகளை பாலியல் ரீதியாக சீண்டினார்: ஸ்ருதி ஹரிஹரன் மீண்டும் பரபரப்பு..!

நடிகை ஸ்ருதி பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆக்சன் கிங் எடுத்த அதிரடி நடவடிக்கை

#MeToo: ஸ்ருதி ஹரிஹரன் மீது அர்ஜுன் ரூ.5 கோடி மான நஷ்ட வழக்கு!!

Me Too: ஸ்ருதியின் மீ டூ விவகாரம் இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் முயற்சி: பிரசாந்த் சம்பர்கி!


இந்நிலையில், ஸ்ருதி ஹரிஹரனின் குற்றச்சாட்டை சட்டரீதியாக சந்திக்கவுள்ளதாக நடிகர் அர்ஜுன் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த ஸ்ருதி, அர்ஜூனை சட்டரீதியாக எதிர்கொள்ள தானும் தயாராக இருப்பதாகவும், அதற்குரிய ஆதாரங்களை திரட்டி வருவதாக தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து அவர் மீது தற்போது ஸ்ருதி ஹரிஹரன் காவல் நிலையத்தில் இன்று புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பத்தாவது: கடந்த 2015ம் ஆண்டு நிபுணன் படத்தில் நடிகர் அர்ஜுனுக்கு மனைவியாக நடித்தபோது, நானும் அவரும் நெருங்கி நடிக்க வேண்டிய காட்சி ஒன்று இருந்தது. அந்தக் காட்சியை படமாக்குவதற்கு முன்பாக, படப்பிடிப்புத் தளத்தில் அனைவரது முன்னிலையிலும், அர்ஜூன் எனது அனுமதியின்றி என்னிடம் நெருக்கமாக வந்து என்னைத் தொட்டார். அது எனக்கு கோபத்தை உண்டாக்கியது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகாரைத் தொடர்ந்து அர்ஜூன் மீது 354A (பாலியல் தொல்லை) மற்றும் 354 என்று ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன் காரணமாக அர்ஜூன் கைது செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக, அர்ஜூனின் உதவியாளர் பிரஷாந்த் மீது புகார் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்