ஆப்நகரம்

அத்துமீறி நுழைந்தவர் மீது நடவடிக்கை எடுக்க ஸ்ருதி கோரிக்கை

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசாரிடம் கூறியுள்ளார்

TNN 8 Apr 2016, 3:15 pm
வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசாரிடம் கூறியுள்ளார்.
Samayam Tamil sruthi hassan wants to take action against people who entered her house
அத்துமீறி நுழைந்தவர் மீது நடவடிக்கை எடுக்க ஸ்ருதி கோரிக்கை


ஸ்ருதிஹாசன் கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் மும்பையில் தனியாக ஒரு அப்பார்ட்மெண்டில் தான் தங்கியுள்ளார். சில தினங்களுக்கு முன் இவரை வீட்டிற்குள் புகுந்து ஒருவர் தாக்கியதாகவும், பின் அவர் ஓடிவிட்டதாகவும் கூறப்பட்டது.

அவரை கண்டுப்பிடித்து போலீசார் விசாரிக்கையில், ‘‘ஸ்ருதிஹாசன் வீட்டு வேலைக்கு ஆட்கள் வேண்டும் என கூறியிருந்தார். அதனால், அவரிடம் என் தம்பிக்கு வேலை கேட்டு தான் சென்றேன். அவரை படப்பிடிப்பில் சந்திக்க முடியவில்லை, அதனால் தான் வீட்டிற்கே சென்றேன்’’ என கூறியுள்ளார். ஆனால், ஸ்ருதிஹாசன் ‘‘இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது, அவர் பல நாட்களாக என்னை பின் தொடர்ந்து வருகிறார். ஒரு பெண் தனியாக இருக்கும் போது அவர் எப்படி உள்ளே வரலாம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்