ஆப்நகரம்

மாஸ்க் அணிந்து மோதும் பிரபாஸ் - ராணா: ராஜமௌலி வெளியிட்ட பாகுபலி வீடியோ வைரல்

மாஸ்க் அணிவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ராஜமௌலி வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Samayam Tamil 26 Jun 2020, 7:51 pm
தற்போது கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போது வரை 4 லட்சத்து 90 ஆயிரம் மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை பகுதியில் கொரோனா வைரஸ் பரவல் மிகவும் அதிக அளவு உள்ளது. தமிழ்நாட்டில் இன்று மட்டும் புதிய உச்சமாக ஒரே நாளில் 3645 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 74,622 ஆக அதிகரித்துள்ளது.
Samayam Tamil Baahubali Mask awareness video


கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தொடர்ந்து அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட 74 ஆயிரத்து 41,357 நபர்கள் குணம் அடைந்து உள்ளனர். இன்று மட்டும் தமிழ்நாட்டில் 46 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை உயிரிழந்த மொத்த எண்ணிக்கை 957 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் சில தினங்களில் இது ஆயிரத்தையும் தொட்டுவிடலாம் என்று அஞ்சப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஒரே வழி விலகியிருப்பது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, மாஸ்க் அணிவது, கை கழுவுவது என பல விஷயங்களை தீவிரமாக கடைப்பிடிக்கும் படி அரசு மக்களை கேட்டு வருகிறது. இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு பிரபலங்களும் சமூக வலைத்தளங்கள் மற்றும் விளம்பரங்களில் இவற்றை செய்யும் படி மக்களை கேட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி தற்போது ஒரு வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். மாஸ்க் அணிவது அவசியம் என்பதை குறிப்பிடும் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாகுபலி இரண்டாம் பாகத்தில் கிளைமாக்ஸில் பிரபாஸ் மற்றும் ராணா மோதிக்கொள்ளும் காட்சியில் இருவரும் மாஸ்க் அணிந்து இருப்பது போல உருவாக்கப்பட்டுள்ளது அந்த வீடியோ. மகிழ்மதியிலும் மாஸ்க் அணிவது கட்டாயம். நீங்களும் மறந்து விடாதீர்கள் என கூறி உள்ளனர்.

ஒவ்வொருவரும் பாதுகாப்புடன் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என அந்த வீட்டில் ராஜமௌலி குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். அதிக அளவில் வைரலாகும் வந்த வீடியோ இதோ..


பாகுபலி படங்களின் வெற்றியை தொடர்ந்து ராஜமௌலி தற்போது ஆர்ஆர்ஆர் என்ற பிரம்மாண்ட படத்தினை அடுத்து இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடித்து வருகின்றனர். பாலிவுட் நடிகை ஆலியா பட் மற்றும் அஜய் தேவ்கன், ஸ்ரேயா உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா முழு அடைப்பு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்