ஆப்நகரம்

பாகுபலி 2 நஷ்டத்துக்கு நான் பொறுப்பு: ராஜமௌலி உத்தரவாதம்

பாகுபலி 2 படம் தமிழில் வெளியாவதில் ஏற்பட்ட வியாபாரச் சிக்கலைப் போக்க, ரூ.2 கோடி நிலுவைத்தொகைக்கு தான் பொறுப்பேற்பதாகத் தெரிவித்துள்ளார் அந்த படத்தின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி.

TNN 28 Apr 2017, 6:57 pm
பாகுபலி 2 படம் தமிழில் வெளியாவதில் ஏற்பட்ட வியாபாரச் சிக்கலைப் போக்க, ரூ.2 கோடி நிலுவைத்தொகைக்கு தான் பொறுப்பேற்பதாகத் தெரிவித்துள்ளார் அந்த படத்தின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி.
Samayam Tamil ss rajamouli takes responsibility for 2 crore rupees
பாகுபலி 2 நஷ்டத்துக்கு நான் பொறுப்பு: ராஜமௌலி உத்தரவாதம்


மிகவும் எதிர்பார்ப்பைக் கிளப்பிய பாகுபலி 2 திரைப்படம் தமிழகத்தில் இன்று மதியம்தான் வெளியானது. படத்தைத் திரையிட தேவையான கேடிஎம் எந்த அரங்குக்கும் அனுப்பப்படாத காரணத்தால் படத்தை திரையிட முடியாத சூழல் ஏற்பட்டது.

இதற்காக உடனடியாக படக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, ரூ.2 கோடி நிலைவைத்தொகைக்கு தான் பொறுப்பேற்பதாக இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி கூறினார். இதனால், மதியத்திலிருந்து பாகுபலி படத்தை திரையிட திரையரங்குகள் சம்மதம் தெரிவித்தன.

இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை ரூ.47 கோடிக்கு விற்கப்பட்டது. ஆனால் விநியோகஸ்தர்கள் செய்த குளறுபடியால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், ராஜமௌலி மிகவும் கவலைக்கு ஆளாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்