ஆப்நகரம்

மேடைப் பாடகி பிரித்திகா தற்போது திரைப்பட பாடகியானார்!

சூப்பர் சிங்கர் போட்டியில் கலந்து கொண்டு பாடிய பிரித்திகாவுக்கு தற்போது திரைப்படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

Samayam Tamil 20 Sep 2018, 4:07 pm
சூப்பர் சிங்கர் போட்டியில் கலந்து கொண்டு பாடிய பிரித்திகாவுக்கு தற்போது திரைப்படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
Samayam Tamil pritika


பிரபல தொலைக்காட்சி நடத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் கலந்து கொண்டு வெற்றிபெற்றவர் பிரித்திகா. கஷ்டப்படும் குடும்பத்தில் இருநது வந்தவர்தான் பிரித்திகா. இவர் தனது கணீர் குரலால் பலரையும் கவர்ந்து போட்டியில் ஜெயித்து பரிசுத் தொகை ரூ.40 லட்சத்தை தட்டிச் சென்றார். அதன் பின்னர் மேடைப் பாடகியாக சிறு சிறு நிகழ்ச்சிகளில் பாடி வந்த பிரித்திகா முதன் முறையாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

பா.ரஞ்சித்தின் உதவியாளர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பரியேறும் பெருமாள்’. இந்தப் படத்தில் கதிர் ஹீரோவாகவும், ஆனந்தி ஹீரோயினியாகவும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற, ரயில் விட போலாமா எனும் பாடலைதான் சூப்பர் சிங்கர் பாடகி, பிரிதிக்கா பாடியுள்ளார். இந்தப் படத்திற்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த பாடலின் உருவாக்க வீடியோவானது சமூக வலைதளங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்