ஆப்நகரம்

மக்களை பாதுகாக்க வேண்டிய அரசை மக்களின் உயிர்க் கொல்லியாக மாறுவதா? விஜய் சேதுபதி

மக்களை பாதுகாக்க வேண்டிய அரசாங்கமே அவர்களின் உயிரைப் பறிப்பதாக என்று விஜய் சேதுபதி அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 23 May 2018, 3:03 pm
மக்களை பாதுகாக்க வேண்டிய அரசாங்கமே அவர்களின் உயிரைப் பறிப்பதாக என்று விஜய் சேதுபதி அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil vijay-sethupathi-759


தூத்துக்குடியில் நடந்து வரும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் இதுவரை 11 பேர் போலீசின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாகியுள்ளனர். பலரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டையே கொந்தளிக்க வைத்துள்ளது.
இந்த சம்பவத்தை கண்டித்து சினிமா நடிகர்கள் பலரும் அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகினற்னர். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி ட்விட்டரில் தன் கோபத்தை பதிவிட்டுள்ளார்.
“கடைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதே, சட்டமோ அரசாங்கமோ எவையும் மக்களின் நலன்/ பாதுகாப்புக்காக வேண்டிய அரசாங்கமே மக்களின் உயிர் கொல்லியாக மாறினால எதற்கு ஒரு அரசாங்கம்? “ என விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்