ஆப்நகரம்

வெங்கட் பிரபு படத்திற்காக தற்காப்பு கலை கற்க வெளிநாடு பறக்கும் நடிகர் சிம்பு!

புதிய படத்திற்காக நடிகர் சிம்பு தற்காப்பு கலைகளைக் கற்க உள்ளார்.

TIMESOFINDIA.COM 10 Feb 2019, 3:39 pm
சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால், நடிகர் சிம்பு மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்.
Samayam Tamil Simbu.


அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்காக தற்காப்பு கலைகள் கற்க, சிம்பு தாய்லாந்து செல்ல உள்ளார். ‘மாநாடு’ படத்தில் ராஷி கண்ணா நாயகியாக நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

பிரவீன் கே.எல். எடிட்டிங் செய்கிறார். சமீபத்தில் சிம்பு பிறந்த நாளன்று பிரம்மாண்ட பூஜையுடன் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் முதல் நாள் படப்பிடிப்பில் எளிமையாக பூஜை செய்து படப்பிடிப்பைத் தொடங்க சிம்பு கேட்டுக் கொண்டார்.

இந்தப் படம் அரசியல் திரில்லராக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள ‘பார்ட்டி’ படத்தின் வெளியீட்டிற்காக இயக்குநர் வெங்கட பிரபு காத்திருக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்