ஆப்நகரம்

என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேமா??: ரசிகர்களால் கவலைப்படும் சிம்பு!!

தனது பெயரை டாட்டூ குத்திய ரசிகரிடம், இவ்வாறு செய்ய வேண்டாம் கஷ்டமாக உள்ளது என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்

Samayam Tamil 2 Feb 2018, 10:26 pm
சென்னை: தனது பெயரை டாட்டூ குத்திய ரசிகரிடம், இவ்வாறு செய்ய வேண்டாம் கஷ்டமாக உள்ளது என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
Samayam Tamil str is upset with fan for tattooing his name on hand
என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேமா??: ரசிகர்களால் கவலைப்படும் சிம்பு!!


நடிகர் சிம்பு கடந்த சில ஆண்டுகளாக பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் சிம்பு மிகவும் குண்டாக தோன்றியிருந்தார். அதைப் பார்த்த அவரது ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர்.

அந்தப் படமும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தது. இதற்கு சிம்பு சரியாக படப்பிடிப்பிற்கு வராததே காரணம் என்று தயாரிப்பாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அவரை படங்களில் கமிட் செய்வதை பலரும் தவிர்த்தனர். இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் வருத்தமடைந்தனர்.

இந்நிலையில், நடிகர் சிம்புவை சந்தித்த ரசிகர் ஒருவர், அவரிடம் ‘எஸ்டிஆர்’ என்று அவர் பெயரை கையில் பச்சைக் குத்தியுள்ளதாக காட்டியுள்ளார். அதைப் பார்த்த சிம்பு, ‘இதெல்லாம் வேண்டாம், மனதில் அன்பு இருந்தால் போதும். இப்படி நீங்கள் செய்வது கஷ்டமாக உள்ளது’ என்று தெரிவித்துள்ளார். இதன்பின், அவர் ரசிகர் அவரைக் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை ரசிகர் ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்