ஆப்நகரம்

தன்னை அனுபவித்து விட்டு, தாடையையும் உடைத்தார்: பிரபல தயாரிப்பாளர் மீது நடிகை புகார்!

பிரபல இந்தி பட தயாரிப்பாளர் கவுரங் தோஷி, என்னை நன்றாக அனுபவித்துவிட்டு, என்னுடைய தாடையையும் உடைத்துள்ளார் என்று நடிகை புளோரா கூறியுள்ளார்.

Samayam Tamil 10 Oct 2018, 3:45 pm
தமிழில் ‘கஜேந்திரா’, ‘குஸ்தி’, ‘குசேலன்’, ‘கனகவேல் காக்க’ உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் நடிகை புளோரா. தற்போது இவருக்கும் ஒரு தயாரிப்பாளரால் பாலியல் கொடுமை நடந்ததாக அவர் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil 625.0.560.320.100.600.053.800.720.160.90 (1)


பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகாரை கூறியிருந்தார். அவருக்கு பல்வேறு நடிகைகள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதனையடுத்து தமிழிலும் வைரமுத்து, ராதாரவி உட்பட முக்கிய சினிமா பிரபலங்கள் மீது புகார்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில் நடிகை புளோராவும் தானும் பாலியல் தாக்குதலுக்குட்பட்டதாக புகைப்பட ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டில் பிரபல இந்தி தயாரிப்பாளர் கவுரங் தோஷி தன்னை நன்றாக அனுபவிதது விட்டு, என்னுடைய தாடையை உடைத்து துன்புறுத்தினார் என்று பரபரப்பு புகார் ஒன்றைத் தெரிவித்துள்ளார். அப்போது காயத்துடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து நடிகை புளோரா கூறுகையில், ‘‘2007 ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று தயாரிப்பாளர் கவுரங் தோஷியால் தாக்கப்பட்டேன். அதற்கு முன் அவருடன் பல முறை டேட்டிங்கில் இருந்தேன். ஒரு வருடம் அவரால் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டிருந்தேன். ஒரு தவறும் செய்யாத நான் அவரால் தாக்கப்பட்டு என் தாடைகளின் எலும்பு முறிந்த நிலையில் பயத்துடன் வெளியே வந்தேன். அவர் இந்திய சினிமாவில் மிகப்பெரிய ஆளாக இருந்ததால் நான் கூறியதை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை’’ என்றார் புளோரா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்