ஆப்நகரம்

"சுச்சி லீக்ஸ் "புகழ் பாடகி சுசித்ரா காவல் ஆணையரிடம் புகார் மனு

பிரபல நடிகர், நடிகைகள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய பாடகி சுசித்ரா நேற்று சென்னை மாநகர காவல் ஆணைய அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

TNN 14 May 2017, 6:10 am
பிரபல நடிகர், நடிகைகள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய பாடகி சுசித்ரா நேற்று சென்னை மாநகர காவல் ஆணைய அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
Samayam Tamil suchitra compling in commisioner office
"சுச்சி லீக்ஸ் "புகழ் பாடகி சுசித்ரா காவல் ஆணையரிடம் புகார் மனு


கடந்த பிப்ரவரி மாதம் பின்னணிப் பாடகியான சுசித்ரா அவருடைய டுவிட்டர் பக்கத்தில் தனுஷ், டிடி, ஹன்சிகா, த்ரிஷா, அனிருத், ஆண்ட்ரியா, ராணா, ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.


சுசித்ராவுக்கு மனநிலை சரியில்லை என்றும், அவருடைய டுவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டதாகவும் சுசியின் கணவர் கார்த்திக் கூறினார். ஆனால், அதனை மறுத்த சுசி என்னுடைய டுவிட்டர் கணக்கை யாரும் ஹேக் செய்யவில்லை என்று தெரிவித்திருந்தார். தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்திய இந்த சுசி லீக்ஸ் வீடியோவிற்கு பிறகு அவரது டுவிட்டர் கணக்கு நீக்கப்பட்டது.

இந்நிலையில், பாடகி சுசித்ரா நேற்று சென்னை காவல் ஆணையத்தில் புகார் ஓன்றை அளித்துள்ளார். அவருடைய மனுவில், கடந்த பிப்ரவரி மாதாம் தன்னுடைய கணக்கிலிருந்து சி ல புகைப்படங்கள் , வீடியோகள் வெளியாகினர். அதற்கு தனக்கும் சம்பந்தம் இல்லை . அப்போது தான் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் தனது அக்கவுண்டை ஹேக் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாடகி சுசித்ரா புகார் மனுவில் தெரிவித்துள்ளார்

அடுத்த செய்தி

டிரெண்டிங்