ஆப்நகரம்

கார்த்திக் அந்த வீடியோவை வெளியிட்டிருக்கக் கூடாது: சுசித்ரா

என் முன்னாள் கணவர் கார்த்திக் அந்த வீடியோவை வெளியிட்டிருக்கக் கூடாது என்று சுசித்ரா தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 7 May 2020, 8:29 am
சுசிலீக்ஸால் பிரச்சனையில் சிக்கிய பாடகி சுசித்ரா தற்போது மீண்டும் ஆர்.ஜே. வாக பணியாற்றுகிறார். மீண்டும் ஆர்.ஜே. வாக பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil suchitra


இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

என் வீட்டு சமையல் அறையில் ஸ்டுடியோ வைத்து அங்கிருந்து தான் ஆர்.ஜே. வேலையை செய்து கொண்டிருக்கிறேன். சந்தோஷமாக இருக்கிறது. நான் 100 சதவீதம் மாறிவிட்டேன். கடந்த 12 ஆண்டுகளில் என் வாழ்வில் ஏகப்பட்ட ஏற்ற தாழ்வுகள் நடந்துவிட்டது.

சமையல் செய்வது எனக்கு பொழுதுபோக்கு. என் சமூக வலைதள கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டது என்று அறிக்கை வெளியிட்டும் சுசிலீக்ஸுக்கு பிறகு பரவிய வதந்திகளால் எனக்கு வேலையில் பிரச்சனை ஏற்பட்டது. நான் பிரபல தமிழ் டிவி சேனலுக்கு கூட பேட்டி அளித்தேன். ஆனால் என் குரல் கேட்காமல் போய்விட்டது.

நான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டேன். அப்பொழுது தான் சமையல் எனக்கு கை கொடுத்தது. நான் முறைப்படி சமையல் குறித்து படித்தேன் என்றார்.

உங்களின் மனநிலை குறித்து முன்னாள் கணவர் கார்த்திக் சமூக வலைதளத்தில் பேசினார். என்ன நடந்தது என்று கேட்டதற்கு, கார்த்திக் அந்த வீடியோவை வெளியிடாமல் இருந்திருக்க வேண்டும். அதனால் பலர் குழப்பம் அடைந்துவிட்டனர். அது என் வேலையை பாதித்தது. வீடியோ வெளியிட்டது மோசமான ஐடியா என்பதை கார்த்திக் பின்னர் உணர்ந்து அதை நீக்கிவிட்டார். அந்த லீக்ஸ்... யார் இப்படி பிரபலங்களின் தனிப்பட்ட வீடியோக்களை வெளியிட்டது, அந்த வீடியோக்களுக்கு பின்னால் இருக்கும் பெரிய கை யார் என்பது எல்லாம் எனக்கு அதிர்ச்சி அளித்தது. இது நாள் வரை நான் அதில் ஒரு வீடியோவை கூட பார்த்தது இல்லை.

நடந்த சம்பவங்களால் மோசமாக உணரவில்லை. ஆனால் மக்கள் தங்கள் சவுகரியத்திற்கு ஏற்ப விஷயங்களை நம்பியது அதிருப்தி அளிக்கிறது. அமலா பால் உள்ளிட்ட சிலர் எனக்கு ஆதரவளித்தார்கள் என்றார்.

ஆபாச வீடியோ, கவினுடனான காதல் முறிவு பற்றித் தான் இப்படி சொல்கிறாரா லோஸ்லியா?

அடுத்த செய்தி

டிரெண்டிங்