ஆப்நகரம்

ஸ்ரீ தேவி என்ற பெண் சிலையை மணல் சிற்பமாக வடித்த சுதர்சன் பட்னாயக்

இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக, 54 வயதில் மரணமடைந்துள்ளார்.

Samayam Tamil 25 Feb 2018, 7:24 pm
இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக, 54 வயதில் மரணமடைந்துள்ளார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவருக்கு மணல் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil sudarshan patnaik sand art for sridevi
ஸ்ரீ தேவி என்ற பெண் சிலையை மணல் சிற்பமாக வடித்த சுதர்சன் பட்னாயக்


தமிழ் மொழியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஸ்ரீதேவி, தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். கமல், ரஜினி, சிரஞ்சீவி மற்றும் ரிஷிகபூர் என இந்திய சினிமாவில் பல உச்சநட்சத்திரங்களுடன் நடித்து புகழின் உச்சிக்கு சென்றவர்.

அவர் இறந்த செய்தி இந்தியா முழுவதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இந்தியாவின் பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்னாயக் ஸ்ரீ தேவியின் மணல் சிற்பத்தை பூரி கடற்கரையில் வடித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்