ஆப்நகரம்

விவாகரத்து கேட்ட தம்பதியினர் இணைய முடிவு!

கணவர் சுதீப்பிடம் இருந்து விவாகரத்து கேட்ட மனைவி தன் கணவருடன் இணைய சம்மதம் தெரிவித்துள்ளார்.

TOI Contributor 16 Jan 2017, 10:59 am
கணவர் சுதீப்பிடம் இருந்து விவாகரத்து கேட்ட மனைவி தன் கணவருடன் இணைய சம்மதம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil sudeeip and his wife decided to join in their life after divorce decision
விவாகரத்து கேட்ட தம்பதியினர் இணைய முடிவு!


நடிகர் சுதீப் தமிழில் ‘நான் ஈ’ படம் மூலம் பிரபலமானவர். இந்தப் படத்தில் இவர் வில்லனாக நடித்துள்ளார். அடுத்ததாக ‘முடிஞ்சா இவனபுடி’ படத்தில் நாயகனாக நடித்துள்ளார். நடிகர் சுதீப், தன் மனைவி பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். இவர்களது திருமணம் 2001ம் ஆண்டு நடந்தது. இவர்களுக்கு சான்வி என்ற மகள் உள்ளார். மகிழ்ச்சியாக சென்ற இல்லற வாழ்க்கையில் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டாடல் இருவரும் பிரிந்தனர். இதையடுத்து இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்தனர். தனது திருமண உறவு முடிவுக்குவந்துவிட்டதாக கடந்த ஆண்டு சுதீப் தெரிவித்திருந்தார். இதையடுத்து விவாகரத்து கேட்டு கணவன், மனைவி கோர்ட்டில் மனு கொடுத்திருந்தார்.
கடந்த 9ம் தேதி இதுதொடர்பாக விசாரணை நடத்த நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. ஆனால் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. மகளின் எதிர்கால நலன் கருதி இருவரும் மனக்கசப்பை மறந்து மீண்டும் இணைந்து வாழ முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இருவரும் பேசி சமாதானமாவதற்கு நீதிபதியிடம் அவகாசம் கோரியிருந்தனர். அதனை ஏற்று வரும் மார்ச் மாதம் 9ம் தேதிக்கு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார் நீதிபதி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்