ஆப்நகரம்

காவிரி பிரச்னை தொடர்பாக நான் ஏதும் சொல்லவில்லை - சுஹாசினி

காவிரி பிரச்னை தொடர்பாக கர்நாடக அரசுக்கு ஆதரவாக கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை என்று நடிகை சுஹாசினி விளக்கம் கொடுத்துள்ளார்.

TOI Contributor 10 Sep 2016, 3:49 pm
காவிரி பிரச்னை தொடர்பாக கர்நாடக அரசுக்கு ஆதரவாக கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை என்று நடிகை சுஹாசினி விளக்கம் கொடுத்துள்ளார்.
Samayam Tamil suhasini denied her cauvery issue rumour
காவிரி பிரச்னை தொடர்பாக நான் ஏதும் சொல்லவில்லை - சுஹாசினி


காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு கடந்த 6ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து மண்டியா, மைசூரு, பெங்களூரில் கன்னட அமைப்புகள், விவசாய சங்கங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.

தண்ணீர் திறந்துவிடுவதை உடனடியாக நிறுத்தக்கோரி நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடந்தது. தமிழ் நாளிதழ்கள் கொளுத்தப்பட்டன. மேலும், இரு மாநில அரசுகளும் எல்லைப்பகுதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் நடிகை சுஹாசினி கர்நாடக அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரி பிரச்னை தொடர்பாக நான் கருத்து தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் தவறான கருத்து வெளியானது. அது உண்மையில்லை. நான் இப்போது வெளியூரில் இருக்கிறேன். நான் எந்தவொரு தகவலையும் சமூக வலைதளங்களில் தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்