பொதுவாக பெரிய நடிகர்கள், பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே ப்ரீ ஷோக்கள் மூலம் பிரபலங்கள் படம் பார்த்து விமர்சனம் சொல்வது வழக்கம். இந்நிலையில் நாளை உலகம் முழுவது வெளியாகவுள்ள 'பொன்னியின் செல்வன்' படம் குறித்து ஒருவர் விமர்சனம் எழுதியுள்ளது குறித்து சுஹாசினி மணிரத்னம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தை இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறது. எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புகழ்பெற்ற நாவலான 'பொன்னியின் செல்வன்' கதை அதே பெயரில் படமாக உருவாகி வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான் உள்ளிட்ட பல மொழிகளை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ள 'பொன்னியன் செல்வன்' படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார் மணிரத்னம்.
நாளை ரிலீசாகும் 'பொன்னியின் செல்வன்' படத்தை வெளியிட நீதிமன்றம் அதிரடி தடை.!
மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனமும், லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். உலகம் முழுதும் நாளை வெளியாகவுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்திற்கு ட்விட்டரில் ஒருவர் படத்தை பார்த்துவிட்டதாக விமர்சனம் எழுதியுள்ளார். அவரின் இந்த ட்விட்க்கு கீழ் சுஹாசினி மணிரத்னம், யார் நீங்கள்? இன்னும் வெளிவராத படத்தை உங்களால் மட்டும் எப்படி பார்க்க முடிந்தது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரின் இந்த கேள்விக்கு ரசிகர்கள், இவர் வெளிநாட்டு சென்சார் அதிகாரி என்று கூறிக் கொண்டு அனைத்து படங்களையும் ரிலீசுக்கு முன்பே விமர்சனம் செய்து அதற்கு ஸ்டார் ரேட்டிங்கும் கொடுப்பவர். விட்டா இவர் ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தை பார்த்துவிட்டதாக கூறுவார் என கிண்டலடித்து வருகின்றனர். இவர் பல தமிழ் படங்களுக்கு ரிலீசுக்கு முன்பே படத்தை பார்த்துவிட்டதாக ட்விட்டரில் ரிவியூ எழுதுவது குறிப்பிடத்தக்கது.
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தை இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறது. எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புகழ்பெற்ற நாவலான 'பொன்னியின் செல்வன்' கதை அதே பெயரில் படமாக உருவாகி வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான் உள்ளிட்ட பல மொழிகளை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ள 'பொன்னியன் செல்வன்' படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார் மணிரத்னம்.
நாளை ரிலீசாகும் 'பொன்னியின் செல்வன்' படத்தை வெளியிட நீதிமன்றம் அதிரடி தடை.!
மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனமும், லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். உலகம் முழுதும் நாளை வெளியாகவுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்திற்கு ட்விட்டரில் ஒருவர் படத்தை பார்த்துவிட்டதாக விமர்சனம் எழுதியுள்ளார். அவரின் இந்த ட்விட்க்கு கீழ் சுஹாசினி மணிரத்னம், யார் நீங்கள்? இன்னும் வெளிவராத படத்தை உங்களால் மட்டும் எப்படி பார்க்க முடிந்தது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரின் இந்த கேள்விக்கு ரசிகர்கள், இவர் வெளிநாட்டு சென்சார் அதிகாரி என்று கூறிக் கொண்டு அனைத்து படங்களையும் ரிலீசுக்கு முன்பே விமர்சனம் செய்து அதற்கு ஸ்டார் ரேட்டிங்கும் கொடுப்பவர். விட்டா இவர் ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தை பார்த்துவிட்டதாக கூறுவார் என கிண்டலடித்து வருகின்றனர். இவர் பல தமிழ் படங்களுக்கு ரிலீசுக்கு முன்பே படத்தை பார்த்துவிட்டதாக ட்விட்டரில் ரிவியூ எழுதுவது குறிப்பிடத்தக்கது.