ஆப்நகரம்

வீட்டில் யானை தந்தங்கள் வைத்திருந்த வழக்கு: நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக மோகன்லாலுக்கு சம்மன்!

யானைத் தந்தங்கள் வைத்திருந்த வழக்கில், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக மோகன்லாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது

Samayam Tamil 25 Oct 2019, 1:30 pm
கொச்சியில் உள்ள மோகன்லால் வீட்டில் கடந்த 2012ம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
Samayam Tamil mohanlal


அப்போது மோகன்லால் வீட்டிலிருந்து 4 யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. அதை வருமான வரித்துறையினர் உடனே வனத்துறையிடம் ஒப்படைத்தனர். அதன் அடிப்படையில் மோகன்லால் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் யானை தந்தங்களைத் திருப்பி தருமாறு வனத்துறை அமைச்சர் ராதா கிருஷ்ணனிடம், மோகன் லால் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் கோரிக்கை ஏற்று அரசு சட்டத்தில் திருத்தம் மேற் கொள்ளப்பட்டு தந்தங்கள் மீண்டும் மோகன்லாலிடம் வழங்கப்பட்டது.

லீக்கான இந்தியன் 2 புகைப்படம்: அதிர்ச்சியில் படக்குழு

இதையடுத்து 7ஆண்டுகள் கழித்து கடந்த மாதம் ஏலூரைச் சேர்ந்த பவுலோஸ் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் பொது நலவழக்கு கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் மோகன்லால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. உடனே அந்த குற்றப் பத்திரிகையை ரத்து செய்யக் கோரி மோகன்லால் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

வாய் பேச முடியாமல், காது கேட்காமல் உயிருக்கு போராடி வரும் பரவை முனியம்மா!

இந்த நிலையில், மோகன்லாலை பெரும்பாவூர் நீதிமன்றம் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பட்டதுள்ளது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய, சென்னை டெய்லர்ஸ் சாலையை சேர்ந்த நளினி ராதாகிருஷ்ணன் உட்பட 3 பேருக்கும் சம்மன் அனுப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்