ஆப்நகரம்

படம் பார்க்க வரும் மக்களை பாதுகாக்கவே காட்சிகள் நீக்கப்பட்டன- சன் பிக்சர்ஸ்

பொதுமக்களுக்கு பாதுகாப்புக்காகவே சர்கார் படத்தின் காட்சிகள் நீக்கப்பட்டதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 10 Nov 2018, 5:41 am
சர்கார் படம் பார்க்க வரும் பொதுமக்களுக்கு பாதுகாப்புக்காகவே சர்கார் படத்தின் காட்சிகள் நீக்கப்பட்டதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.
Samayam Tamil படம் பார்க்க வரும் மக்களை பாதுகாக்கவே காட்சிகள் நீக்கப்பட்டன- சன் பிக்சர்ஸ்
படம் பார்க்க வரும் மக்களை பாதுகாக்கவே காட்சிகள் நீக்கப்பட்டன- சன் பிக்சர்ஸ்


நடிகர் விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘சர்கார்’. சன்பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடந்த நவம்பர் 6 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று, வசூலில் சாதனைப் படைத்து வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, இப்படத்தில் ஆளும் அதிமுக கட்சியின் இலவசத் திட்டங்களை விமர்சித்துள்ளதாகவும், ஜெயலலிதாவின் பெயரைப் பயன்படுத்தியதாகவும் அதிமுக அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, அதிமுக தொண்டர்கள் சர்கார் படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டு, பேனர்களை கிழித்து வன்முறை செய்தனர். மேலும், நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் தயாரிப்பு நிறுவனம் மீது அதிமுகவினர் காவல்நிலையத்தில் வழக்குப் போட்டனர். இதன் பின்னர் ஆளும் கட்சியின் அழுத்தம் காரணமாக, சர்ச்சைக்குரிய காட்சிகளை படக்குழு நீக்கியது.

இந்நிலையில், காட்சிகள் நீக்கப்பட்டதற்கு விளக்கமளித்துள்ள சன்பிக்சர்ஸ் நிறுவனம், “ஆளும் கட்சியினர் சர்கார் படத்தில் வரும் சில காட்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டனர். பேனர்களை கிழித்து, திரையரங்கு உடைமைகளையும் சேதப்படுத்தினர். திரைப்படம் பார்க்க வரும் மக்களின் பாதுகாப்பிற்காகவும், திரையரங்குகளின் பாதுகாப்பிற்காகவும் சில காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டன,” என தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்